Home » Archives by category » அரசியல் (Page 143)

இந்தியளவில் கமல்ஹாசன் டிவீட் டிரெண்டிங்!

Comments Off on இந்தியளவில் கமல்ஹாசன் டிவீட் டிரெண்டிங்!

அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்என்.ரவி பேசுவது கடும் விமர்சனர்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி “மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை “தமிழகம்” என்று அழைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா தமிழ் நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள் என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார். அக்கட்சியின் […]

Continue reading …

சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

Comments Off on சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பாதை தோற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி தனது தாயாரை பார்ப்பதற்காக டில்லி திரும்பினார். தனது தாயாரின் அவரது உடல் […]

Continue reading …

சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் வாதம்!

Comments Off on சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் வாதம்!

சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக வாதம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று வாதம் செய்தது. இதில், “அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது. அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தால் கூட நான் தான் வெற்றி பெறுவேன். ஒற்றை தலைமையில் அமர்வேன், தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சியை […]

Continue reading …

ஆளுநர் பேசியதை குறித்து தமிழிசை விளக்கம்!

Comments Off on ஆளுநர் பேசியதை குறித்து தமிழிசை விளக்கம்!

புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான், இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது, அதனால் தான் தமிழ்நாடு […]

Continue reading …

ஆளுநருக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!

Comments Off on ஆளுநருக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை “ஆளுநராக செயல்படுங்க.. பாஜக தலைவராக அல்ல!” என டி.ஆர்.பாலு அட்வைஸ் செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதை தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருவது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் […]

Continue reading …

#தமிழ்நாடு ஹேஷ்டேக் டிரெண்ட்!

Comments Off on #தமிழ்நாடு ஹேஷ்டேக் டிரெண்ட்!

ஆளுநர் தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என பேசியதற்கு எதிராக டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருகிறார். இவரது பேச்சு திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ‘தமிழ்நாடு’ என்று மாநிலத்தின் பெயர் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே […]

Continue reading …

ஈ.வெ.ரா.திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on ஈ.வெ.ரா.திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவேரா திருமகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் […]

Continue reading …

ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன?

Comments Off on ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன?

இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தது. இப்பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று வழக்கறிஞர்கள் கூறப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு ஓபிஎஸ் […]

Continue reading …

பரூக் அப்துல்லா “ஒற்றுமை யாத்திரை”க்கு பாராட்டு!

Comments Off on பரூக் அப்துல்லா “ஒற்றுமை யாத்திரை”க்கு பாராட்டு!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ராகுல்காந்தியின் ‘ஒற்றுமை யாத்திரை’ இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, ஆந்திரா, தெலுங்கானா, டில்லி ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்தார். தற்போது உத்தரபிரதேசத்தில் யாத்திரையை ஆரம்பித்துள்ளார். நேற்று ராகுல் காந்தியின் யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை வரவேற்று பேசியிருந்தார். காஷ்மீர் முன்னாள் […]

Continue reading …

நடிகை காயத்ரி ரகுராம் உருக்கம்!

Comments Off on நடிகை காயத்ரி ரகுராம் உருக்கம்!

கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “பாஜகவிலிருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம். அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணாமலை பற்றி இனி நான் […]

Continue reading …