
நாளை அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 18 மாத ஆட்சி காலத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்பட பல்வேறு சீர்கேடுகள் உள்ளதை அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 9ம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை புயல் உருவாகி இருப்பதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் நாளைய ஆர்ப்பாட்டம் டிசம்பர் […]
Continue reading …
அதிமுக பிரபலமாக இருந்த கோவை செல்வராஜ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில், அதிருப்தியாளராக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்துள்ளார். அவர் ஓபிஎஸ் மீதும் ஈபிஎஸ் மீதும் அதிருப்தியடைந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் முக்கிய முடிவு எடுக்க போவதாகவும் கூறியிருந்த கோவை செல்வராஜ் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவை ஓபிஎஸ், […]
Continue reading …
கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட பின் முதல் முறையாக இன்று அவர் ரயிலில் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளதாகவும், தென்காசியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் அதன்பின் மதுரை செல்ல உள்ளார் என்றும், மதுரை நிகழ்ச்சிகள் முடித்த பின் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க ஆணை பிறப்பித்துள்ளதற்காக சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. மத்திய அரசு அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ், எம்பி, சு.வெங்கடேசன் எம்.பி. பலரும் […]
Continue reading …
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்ட மசோதா குறித்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் தற்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று மூன்று நீதிபதிகளும் செல்லாது என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் […]
Continue reading …
சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. […]
Continue reading …
வருமான வரித்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரிபாக்கியில் 20% மட்டுமே செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் அதை முன்னாள் அமைச்சர் செலுத்தவில்லை என்றும் அதனால் அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் மூடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. விஜயபாஸ்கர் 206 கோடி வரிக்காக 117 ஏக்கர் நிலம் 4 வங்கி கணக்குகள் ஆகியவற்றை வருமான வரித்துறை […]
Continue reading …
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிஎஸ்டி வரை முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல். இந்தவசூல் தொகை கடந்த ஆண்டு நவம்பரை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் இந்த முறை அந்த ஒரு தொகுதியை கூட விடாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை ஏற்ற முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்து விட்டோம். ஆனால் இம்முறை 40 தொகுதிகளிலும் […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி தனது டுவிட்டரில், இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணியாளர் போட்டித் தேர்வும், தமிழக பல்கலைக்கழகத் தேர்வும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் […]
Continue reading …