
2026 சட்டமன்ற தேர்தலின்போது பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கூறப்படும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில உளவுத்துறை உறக்க நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் ஷாரிக் என்பவர் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல். இன்று முதல் நாளில் இருந்தே தமிழக பாஜக மட்டுமே கூறி வந்தது. ஷாரிக் […]
Continue reading …
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்குகிறது. இவ்வாண்டு இலவச வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதைப் போன்று இந்த ஆண்டும் பொங்கல் தினத்தில் வேட்டி சேலைகள் வழங்க […]
Continue reading …
பிரதமர் மோடியை பார்த்து வியப்பாக உள்ளதாக இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். இன்று வாரணாசியில் காசி தமிழ் சங்க விழா நடைபெற்றது. இவ்விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விழாவில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நடைபெற்றது. அவர் பிரதமரை பார்த்து வியந்து பேசினார். “பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். பெருமை மிகுந்த இந்த காசி நகரில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து […]
Continue reading …
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுனர் மாளிகை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். டிசம்பர் 29ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்குறள் என்பது இந்துக்களின் குரல் என்பது உலகப் பொது மறையை இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகம் போல் பயன்படுத்தும் […]
Continue reading …
பாஜகவால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வு வயிறு எரிகிறது என்றும் சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என்றும் நடிகை குஷ்பு பேசியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் பாஜக தமிழகத்தில் மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அடையாறு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது அவர், “பால் விலை உயர்வை கேட்கும் போது […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “மருத்துவமும் கல்வியும் அரசின் இருகண்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தொடும். ஏழை மக்களின் நலன் காக்க கலைஞர் ஆட்சியில் ஏராளமான சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. விபத்தில் ஏற்பட்ட மனித உயிர் இழப்பை தடுக்க நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நோயை […]
Continue reading …
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை […]
Continue reading …
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் திடீரென 18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற தொகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள அஞ்செலி என்ற ரயில் நிலையத்தில் ரயில்களை […]
Continue reading …
பிரதமர் மோடி நாளை இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்படுகிறார். உலக பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் சேர்ந்த அமைப்பு ஜி20 எனப்படுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், இந்தியா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் என மொத்தம் 20 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜி20 உச்சி மாநாட்டை ஒவ்வொரு […]
Continue reading …