Home » Archives by category » அரசியல் (Page 152)

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

Comments Off on அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

10 சதவீதம் உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தரும் மசோதா செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்ப்பு தமிழக அரசியல் கட்சிகள் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “மாதம் ரூ.66,660 மற்றும் தினமும் ரூபாய் 2222 சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை தூக்கி விடுவது தான் சமூக நீதியே தவிர இது வறுமை ஒழிப்பு திட்டம் […]

Continue reading …

கமலாலயத்தில் அமித்ஷாவின் ஆலோசனை!

Comments Off on கமலாலயத்தில் அமித்ஷாவின் ஆலோசனை!

இன்று பாஜக அலுவலகமான சென்னையிலுள்ள கமலாலயத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையிலுள்ள பிரபல இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். தற்போது, பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், தற்போதைய அரசியல் நிலவரம் […]

Continue reading …

பிரதமரை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on பிரதமரை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமரை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தடைந்தார். திண்டுக்கல்லில் பிரதமரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி காந்திகிராமம் செல்லும் வழியில் உள்ள பாஜக தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பு கையசைத்தார். பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]

Continue reading …

அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா அதிமுக?

Comments Off on அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா அதிமுக?
அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா அதிமுக?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இக்கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இத்தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

15ம் தேதி பாஜக போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!

Comments Off on 15ம் தேதி பாஜக போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுதும் வரும் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பால் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பால் விலை ஏற்றத்தை கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகம் முழுதும் போராட்டத்தில் பாஜக ஈடுபடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். “பால் வழங்கும் நிறுவனம் அதன் நிர்வாக சீர்கேட்டினால் நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை […]

Continue reading …

யாத்திரையின்போது மூத்த தலைவர் திடீர் மரணம்!

Comments Off on யாத்திரையின்போது மூத்த தலைவர் திடீர் மரணம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் போது திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணகுமார் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை […]

Continue reading …

சமூகநீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on சமூகநீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் போராட்டம் நூறாண்டு கால சமூக நீதி போராட்டத்திற்கான ஒரு பின்னடைவு என்று தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த இட ஒதுக்கீடு முறை சமூகத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிராக அமையும் வகையில் திமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான 100 […]

Continue reading …

கமலஹாசனின் பிறந்தநாள் பேட்டி!

Comments Off on கமலஹாசனின் பிறந்தநாள் பேட்டி!

நடிகர் கமலஹாசனின் 68வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்களும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொண்டாடினர். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். “பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்ய மேடையமைத்து கொடுக்கிறேன். அமெரிக்கா முதல் குக்கிராமங்கள் வரை பல பகுதிகளிலும் தோழர்கள் நற்பணி செய்து வருகிறார்கள். இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டுக் கொடுத்துள்ளோம். நாட்டிற்கு கழிப்பறை, […]

Continue reading …

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை உறுதி!

Comments Off on தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை உறுதி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்று கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி அடுத்து […]

Continue reading …

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை!

Comments Off on பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை!

100 நாட்களை கடந்து பாரந்தூரில் கட்டப்படவுள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுற்றது. மாநில அரசு சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் எனும் திட்டத்தை அறிவித்ததில் இருந்து ஏகனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு குடியிருப்பாளர்கள் தங்கள் மூதாதையர் நிலம் மற்றும் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இவர்களது போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய கிராம மக்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் “நீர்நிலைகளை […]

Continue reading …