சமீபத்தில் தமிழக அமைச்சர் பொன்முடி திமுக ஆட்சியில் தான் பெண்கள் பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறார்கள் என பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது தமிழகத்தில் பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது. இது குறித்து […]
Continue reading …சோக் கெலாட் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் தலைவர் போட்டியிலிருந்த விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதலமைச்சரை […]
Continue reading …நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக திமுகவினர் பொதுவெளியில் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பேருந்து குறித்து பேசிய வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் […]
Continue reading …என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையில் போலீஸ்காரங்களே குறுக்க வராதீங்க என பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். பிரச்சினைகள் குறித்து டிஜிபியிடம் பேசியுள்ளோம். பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் […]
Continue reading …காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். 22 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டில்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, […]
Continue reading …பாமக நிறுவனம் டாக்டர்.ராமதாஸ் பல மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமில்லை என்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தமிழ்நாட்டில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது! அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியர்களுக்கு பல்கலைகளே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல […]
Continue reading …திமுக எம்.பி. ராசா “என் மீது வழக்குப் போடும் நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். திமுக எம்பி ஆ ராசா கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு, அதிமுக, தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் ஆ. ராசாவை கடுமையாக விமர்சனம் […]
Continue reading …எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் செயல்பட்டு வருகிறது. அதிமுக குறித்த வழக்குகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பக்கமே தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் இன்று திடீரென அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி, “உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை […]
Continue reading …பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் பரவி வருவதால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடுமென்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல! காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் […]
Continue reading …குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம் என்பவர் பாஜகவில் இணையபோவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜகவினர் முடித்து விட்டதாகவும் விரைவில் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறானது என்றும், திமுக எம்எல்ஏக்கள் பெயர்களை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவதூறு பரப்பப்பட்டு […]
Continue reading …