எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 11 மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மேவானி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு […]
Continue reading …சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ “எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தயவுசெய்து கமலாலயம் மட்டும் சொல்லாதீர்கள்” என பேசியது அங்கு இருப்பவர்கள் மத்தியில் கலகலப்பை கூட்டியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதியின் காரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றார். இதனை அடுத்து அவர் சுதாரித்து தனது காரில் சென்றார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி காரிலும் தான் ஏற முயன்றதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய காரை நீங்கள் தாராளமாக எடுத்துச் […]
Continue reading …தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் […]
Continue reading …மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. […]
Continue reading …எம்.பி.அன்புமணி 25 மருத்துவ இடங்கள் யாருக்கும் பயனில்லாமல் போனது என்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். “அகில இந்திய தொகுப்புகளில் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 24 இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போனது” என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் […]
Continue reading …இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று புகர்ந்துள்ளார். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் […]
Continue reading …அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேப்டாப் மற்றும் சான்றிதழ் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. அதிமுக ஆட்சியிலும், மறைந்த ஜெயலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில் நீட்டை தமிழகத்திற்குள் நுழையவிடல்லை. ஆனால், அவரது ஆட்சிக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ் நாட்ற்குள் நுழையவிட்டனர் என அதிமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Continue reading …சொத்து வரிகளை உயர்த்தியதை எதிர்த்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறுக்கிறது. தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரிகளை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறுக்கிறது. இது குறித்து அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு… வீடுகளுக்கான சொத்து வரியை 100 சதவீதம் வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்து வரியை 150 சதவீதம் வரையிலும் கொஞ்சமும் […]
Continue reading …டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அவர்களுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் வந்தடைந்த சோனியா காந்தியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அண்ணா சிலையை திறந்து வைத்தார் […]
Continue reading …நாம் தமிழர் கட்சி சீமான் இன்று திருவொற்றியூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பை அதிகாரிகள் இடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது பொது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சென்றார். அங்கு அவர் அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்து […]
Continue reading …