Home » Archives by category » அரசியல் (Page 175)

ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு

Comments Off on ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு

இலங்கையின் முன்னார் அமைச்சரான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் பல இடங்களில் கலவரம் மூண்டுள்ளது. இதில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவமும் களத்தில் உள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், […]

Continue reading …

ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

Comments Off on ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

ராஜபக்சேவின் மகன்களில் ஒருவரான நாமல் ராஜபக்ச, “பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார்” என தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை […]

Continue reading …

யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?

Comments Off on யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?

பா.ஜ.க வரலாற்றிலேயே இளம் மாநில செயலாளராகி உச்சத்தை தொட்டுள்ளார் SG சூர்யா. மோடியுடன் பயணம், மேலிட தலைவர்களிலிருந்து, அமைச்சர்கள் வரை அனைவரிடமும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தலைவர் அண்ணாமலைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நடந்த போர் ஒரு வழியாக முடிந்துள்ளது. 2024 தேர்தலை சந்திக்க தனது அணியை வலுவாக நியமித்து அரசியல் பிரவேசத்தை துவங்கி இருக்கிறார் அண்ணாமலை. 11 துணைத் தலைவர்கள், 5 பொதுச்செயலாளர்கள், 13 […]

Continue reading …

ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

Comments Off on ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

ஜெயக்குமார் கைது கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தாக்கியதால் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரேஷ் குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் தான் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நரேஷ்குமார் தாக்கியதால் கைது செய்யப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வழக்குகளில் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று சட்டச்சபையில் அதற்காக நன்றி தெரிவித்து அவர் பேசும் போது சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை வீணாக்காமல் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * அரசுப்பள்ளி […]

Continue reading …

முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசிய இடைத்தரகர்!

Comments Off on முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசிய இடைத்தரகர்!

கர்நாடக பாஜக எம்எல்ஏ ரூபாய் 2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசியலில் இடைத்தரகர்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது டெல்லியில் இருந்து ஒரு இடைத்தரகர் வந்ததாகவும் அவர் தன்னிடம் 2500 கோடி ரூபாய் தயாராக வைத்திருங்கள் உங்களை முதலமைச்சர் காட்டுகிறேன் […]

Continue reading …

இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது திமுக

Comments Off on இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது திமுக

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 2020ம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத்திறன் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், வருகிற மே 7ம் தேதியுடன் திமுக ஆட்சி […]

Continue reading …

பார்ட்டியில் ராகுல் காந்தி, வீடியோ லீக்!

Comments Off on பார்ட்டியில் ராகுல் காந்தி, வீடியோ லீக்!

ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. குஜராத்தில் தேர்தல் வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு கூட போகாமல் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் இருக்கும் படியான ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை […]

Continue reading …

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் எம்.எல்.ஏ., !

Comments Off on தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் எம்.எல்.ஏ., !

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என அதன் தலைவர் வேல்முருகன் அறிக்கை.  உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, […]

Continue reading …

தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்!

Comments Off on தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்!

தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]

Continue reading …