முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் […]
Continue reading …இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரவு 10.30 மணிக்கு பின் வந்துள்ளார். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதையடுத்து […]
Continue reading …மத்திய அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தக்கலையில் ரோடு ஷோ மேற்கொண்டார். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]
Continue reading …பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று தெரிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரத்தில், “டிடிவி தினகரன் கையில் அதிமுக முதலிலே சென்று இருந்தால் ஸ்டாலின் […]
Continue reading …ராதிகா மற்றும் சரத்குமார் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ஹெல்மேட் அணியாமல் சென்று வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தொகுதி நட்சத்திர களமாக உருவாகியுள்ளது. சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்தில் […]
Continue reading …தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும், அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் […]
Continue reading …அமலாக்கத்துறை கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9-ம் […]
Continue reading …கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் “டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். கோவையில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், “இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என சொல்லியிருந்தேன். அதனால் எங்களது பிரதிநிதி பங்கேற்றார். இதனைப் பார்த்து நான் பயந்து விட்டதாக பாஜகவினர் […]
Continue reading …வருகிற ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் நாட்டில் அதிமுக, திமுகவுக்கு எதிராக பாஜக போட்டியிடும் நிலையில், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர். விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று பிரசாரத்தில், “தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் மோடி. என்னை வெற்றிபெறச் செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்குச் சேவை செய்வேன். மதுரையில் […]
Continue reading …