Home » Archives by category » அரசியல் (Page 31)

வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

Comments Off on வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், “கண்ட்ரோல் யூனிட் வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும், அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும், […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் மனு; இன்று முக்கிய உத்தரவு?

Comments Off on செந்தில் பாலாஜியின் மனு; இன்று முக்கிய உத்தரவு?

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க கோரிக்கை செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்; 32வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது என்பதால் இன்று அவர் […]

Continue reading …

விஜய்யின் மறைமுக தகவலால் ரசிகர்கள் பரபரப்பு!

Comments Off on விஜய்யின் மறைமுக தகவலால் ரசிகர்கள் பரபரப்பு!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தது. தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மறைமுக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம் அன்று வாழ்த்து கூறாத விஜய், அன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் அதற்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார். நாட்டில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சம […]

Continue reading …

கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

Comments Off on கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் என்று கோவையில் பிரச்சாரம் செய்தார். கமல்ஹாசன் கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, “வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சாதாரண மற்ற தேர்தலை போல் கிடையாது. இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போர். சிறையில் கஷ்டப்பட்டு செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்ட சுதந்திரம் வெள்ளையர்களை வெளியேற்றினாலும் அந்த தியாகம் எல்லாம் இன்று கொள்ளையர்கள் கையில் நாடு இருக்கிறது. […]

Continue reading …

ஜே.பி.நட்டா பேச்சு!

Comments Off on ஜே.பி.நட்டா பேச்சு!

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பிரதமர் நரேந்திர மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை முசிறியில், பெரம்பலூர் பாராளுமன்ற […]

Continue reading …

கலங்கிய சண்முக பாண்டியன்!

Comments Off on கலங்கிய சண்முக பாண்டியன்!

தேமுதிக வேட்பாளர் விஜய பிராபகரன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி சிவகாசி அருகேயுள்ள அம்மையார்பட்டியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சண்முக பண்டியன் கிராம மக்களிடம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தந்தை விஜயகாந்தை நினைத்து திடீரென கண்கலங்கினார். இதனையடுத்து கிராம மக்கள் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

Continue reading …

குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்; டாக்டர் கிருஷ்ணசாமி!

Comments Off on குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்; டாக்டர் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன், அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் கூறியுள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கிறது. அந்த அருவிகளில் […]

Continue reading …

தி.மு.க கூட்டணி குறித்து ஜூனியர் விகடன் சர்வே!

Comments Off on தி.மு.க கூட்டணி குறித்து ஜூனியர் விகடன் சர்வே!

ஜூனியர் விகடன் எடுத்த கருத்து கணக்கில் தமிழக மற்றும் புதுவை என 40க்கு 40 திமுக கூட்டணி தான் வெல்லும் என்று கூறப்பட்டாலும் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்றும் அதிகபட்சமாக திமுகவுக்கு 33 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜூனியர் விகடன் டீம் தமிழகம் முழுவதும் தேர்தல் நிலவரம் குறித்து கருத்துக்கணிப்பு எடுத்துள்ளது. அதில், “திமுக கூட்டணிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுகவுக்கு ஒரு தொகுதி […]

Continue reading …

ராகுல் காந்தியின் திட்டம்!

Comments Off on ராகுல் காந்தியின் திட்டம்!

ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சி கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் ராகுல் காந்தி இது குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இப்போது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் விழித்துக் கொள்ள முடியாது” என கூறியுள்ளார். வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது சமூகவலைத்தளத்தில், “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் […]

Continue reading …