
பொன்முடி குற்றவாளி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த நகல் வெளியானதையடுத்து, மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கிடையே பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் […]
Continue reading …
பிரதமர் மோடி உலகளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். பின் பேசிய பிரதமர் மோடி, “உலகளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது. 3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் […]
Continue reading …
சமீபத்தில் முதல் முறையாக நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் சமீபத்தில் முதல் முறையாக அரசியல் குறித்த அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக இருந்தது. விஜய்யின் இந்த அறிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் எந்தவித விமர்சனம் செய்யவில்லை.ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டும் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனம் செய்து வந்தனர். விஜய்யின் அரசியல் அறிக்கைக்கு நடிகை கஸ்தூரி, “அன்பிற்குரிய தளபதி விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக […]
Continue reading …
வரவிருக்கும் விரைவில் மக்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக சமீபத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் 2024-க்காக 2ம் கட்ட வேட்பாளர் […]
Continue reading …
உச்சநீதிமன்றம் நாளை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தாக்க செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளிப்பதை சமீபத்தில் தடை செய்தது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்தவர் விவரங்களை அளிக்கக் கோரி எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ கோரிக்கை விடுத்த நிலையில் நாளைக்குள் எஸ்பிஐ தேர்தல் பத்திர ஆவணங்களை தாக்கல் செய்ய […]
Continue reading …
50க்கும் மேற்பட்ட அருந்தியினர் சமுதாய மக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.நடுப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், 7 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர கோரியும் மாவட்ட நிர்வாகத்திடமும், உசிலம்பட்டி வருவாய்த்துறையினரிடமும் பலமுறை மனு அளித்து முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இன்று பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் […]
Continue reading …
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் “கர்நாடக மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து […]
Continue reading …
சபாநாயகர் அப்பாவு பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார். இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
Continue reading …
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரை போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அப்பதிவில் அவர், “வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி. 1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது என்று அறிவித்துள்ளார். நேற்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது. சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இனம் மதம் ஆகியவற்றால் […]
Continue reading …