Home » Archives by category » அரசியல் (Page 48)

சிஏஏ தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்! முதலமைச்சர் அறிவிப்பு!

Comments Off on சிஏஏ தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்! முதலமைச்சர் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது என்று அறிவித்துள்ளார். நேற்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது. சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இனம் மதம் ஆகியவற்றால் […]

Continue reading …

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

Comments Off on அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு […]

Continue reading …

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளா?

Comments Off on காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளா?

காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று பிடிவாதமாக இருந்தது. திடீரென பத்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது திமுகவின் மேலிட வட்டாரத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் சிலர் 10 தொகுதிகள் தராவிட்டால் புது ரூட் போட்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மேல் இடத்தில் சொன்னதாகவும் அதற்கு மேலிடமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து கொண்ட திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் […]

Continue reading …

விஜய் கட்சி குறித்து வேல்முருகன் கடுமையான விமர்சனம்!

Comments Off on விஜய் கட்சி குறித்து வேல்முருகன் கடுமையான விமர்சனம்!

தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விஜய்யின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததோடு, விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் “சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள், 50 லட்சம் என்று ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும், நான் […]

Continue reading …

கமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்; குஷ்பு பேட்டி!

Comments Off on கமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்; குஷ்பு பேட்டி!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்றில், “தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது. கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் திமுகவிற்கும் இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் 2025ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு சீட் உண்டு என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் […]

Continue reading …

இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

Comments Off on இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. […]

Continue reading …

பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக?

Comments Off on பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக?

பாமக அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் சேர இருக்கிறது என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு […]

Continue reading …

இடத்தை மாற்றியதால் கடுப்பில் கனிமொழி?

Comments Off on இடத்தை மாற்றியதால் கடுப்பில் கனிமொழி?

மதுரையில் மார்ச் 10ம் தேதி கனிமொழி தலைமையில் மாபெரும் மகளிர் மாநாடு நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த மாநாட்டை திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கனிமொழிக்கு இது குறித்த தகவல் சொன்னபோது எதற்காக இடத்தை மாற்றினீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் சொல்லாத நிலையில் கடைசியில் மேலிட உத்தரவு தான் காரணம் என்று கனிமொழிக்கு தெரிய வந்ததும் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மேலிடம் உதயநிதி […]

Continue reading …

விஜய் கட்சியில் இத்தனை லட்சம் பேரா?

Comments Off on விஜய் கட்சியில் இத்தனை லட்சம் பேரா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகப்படுத்தினார். மேலும், மே மாதத்திற்குள் அதிக […]

Continue reading …

அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்?

Comments Off on அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்?

அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். […]

Continue reading …