Home » Archives by category » அரசியல் (Page 50)

மார்ச் 22-ல் மீண்டும் மோடி தமிழகம் வருகை!

Comments Off on மார்ச் 22-ல் மீண்டும் மோடி தமிழகம் வருகை!

மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். தென்மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் […]

Continue reading …

மதிமுகவுக்கு திமுக சீட் ஒதுக்கியது எத்தனை?

Comments Off on மதிமுகவுக்கு திமுக சீட் ஒதுக்கியது எத்தனை?

திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திமுக மதிமுக இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் […]

Continue reading …

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை!

Comments Off on நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை!

பிரதமர் மோடி இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இச்சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பள்ளி […]

Continue reading …

விஸ்வரூபம் எடுக்கும் சிறுமி கொலை வழக்கு!

Comments Off on விஸ்வரூபம் எடுக்கும் சிறுமி கொலை வழக்கு!

பல்வேறு கட்சித் தலைவர்களும் புதுச்சேரியில் சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட […]

Continue reading …

24வது முறையாக செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on 24வது முறையாக செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் காவல் 23 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 24வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது 24-வது முறை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் […]

Continue reading …

அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் போட்டியா?

Comments Off on அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் போட்டியா?

ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி சோனியா காந்தி ஆகியோர் அமேதி தொகுதியில் போட்டியிட்டனர் என்பதால் இந்த தொகுதியில் காங்கிரஸ் பலமாக இருந்தது. கடந்த 2002ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தார். ஆனால் 2019ம் ஆண்டு ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார். […]

Continue reading …

புதுவை சிறுமி கொலை குறித்து கமல்ஹாசன்!

Comments Off on புதுவை சிறுமி கொலை குறித்து கமல்ஹாசன்!

கமல்ஹாசன் புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த […]

Continue reading …

முன்னாள் எம்.பி. செல்வேந்திரனின் உறுதி!

Comments Off on முன்னாள் எம்.பி. செல்வேந்திரனின் உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்பம் செல்வேந்திரன் பேசும்போது, “உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர் என்றால் அதற்கு காரணம் தான் பிறந்த தமிழ்நாட்டை தனது உழைப்பால் உயர்த்தி காட்டி திராவிட மாடல் என்ற ஆட்சியை […]

Continue reading …

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா?

Comments Off on திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா?

மதிமுக திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், நிர்வாக குழு கூட்டம் நாளை சென்னையில் நாளை நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதற்காக குழுவை தி.மு.க அமைத்திருக்கிறது. இதில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் […]

Continue reading …

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

Comments Off on சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுமி கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறுமியின் கொலை குறித்து அறிந்ததும் நிலைகுலைந்து விட்டதாகவும், […]

Continue reading …