
பிரதமர் மோடி திமுகவை இனி தமிழகத்தில் பார்க்க முடியாது என நெல்லையில் ஆவேசமாக பேசியுள்ளார். நேற்று பல்லடம் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த மோடி பேசினார். அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது “இனி திமுகவை […]
Continue reading …
பிரதமர் மோடி திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என கூறினார். அதற்கு திமுக எம்பி கனிமொழி திமுக அழியும் என சொன்ன பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி, தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது என்றும் திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பங்கேற்றிருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “திமுக அழியும் […]
Continue reading …
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 24ம் தேதி முதல் தேதி முதல் காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த வாரம் அவர், பாஜகவில் இணைந்தோடு தனது எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன், தமிழக தலைமை […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியினர் மீனவர்கள் கைது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பழவேற்காடு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிளி Go Back Modi என முழக்கமிட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு […]
Continue reading …
சசிகலா தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின் ஒப்பற்ற சாதனையாக இன்றைக்கு பார்க்க முடிகிறது. நமது நாட்டை சுற்றி சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை ஆட்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டிலேயே தண்ணீர் தர […]
Continue reading …
எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்களை இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில், சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏக்கள் இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் […]
Continue reading …
காமராஜர் மக்கள் கட்சி தமிழருவி மணியன் பல்லடம் அருகே நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடி மீண்டும் பிரதமராக பாடுபடும் என்று அறிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்ட ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்துகொள்ள இன்று பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். இப்பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ராமேஸ்வரத்தில் கடந்த 2023 ஜூலை மாதம், தொடங்கப்பட்டது “என் மண் என் மக்கள்” என்ற நடைப்பயணம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் இன்று திருப்பூரில் நிறைவடைந்தது. இந்த நடைபயணத்தின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “சரித்திரத்தில் இடம்பெறுள்ளோம். இத்தனை […]
Continue reading …
உச்ச நீதிமன்றம் மணல் குவாரி சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சட்டவிரோத மணல் குவாரி குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் அனுப்பிய நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். […]
Continue reading …
இன்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். பல்லடம் பகுதியில் நடந்த கூட்டத்தில், “தமிழக மக்கள் மிகவும் அறிவாளிகள், கொள்ளையர்களின் நாடகத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்” என்று தெரிவித்தார். கூட்டத்தில் பேசும்போது, “தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்க, பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர். மக்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி, அவர்களை பிரித்து, தங்களை நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழக மக்கள் […]
Continue reading …