Home » Archives by category » அரசியல் (Page 55)

அதிமுகவில் 2 பாஜக எம்.எல்.ஏக்களா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Comments Off on அதிமுகவில் 2 பாஜக எம்.எல்.ஏக்களா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானதே என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரிகிறது, அப்படி ஒருவேளை வந்தால் நானே உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன் என்று தெரிவித்தார். கோவையில் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் என்பவர் பேட்டியில், “நான் பாஜகவில் சேர போவதாக வதந்திகள் பரப்பி வருகிறார்கள். அது முழுக்க முழுக்க தவறான தகவல். பின்னர் பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் தான் அதிமுகவுக்கு வரப் போகிறார், […]

Continue reading …

தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

Comments Off on தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘தேர்தலுக்குப் பின் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்‘ என்று தெரிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]

Continue reading …

நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Comments Off on நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

நேற்று பிரதமர் மோடி நள்ளிரவில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துடன் ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள ஷிவ்பூர்- புல்வாரியா லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவும், வேறுசில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்றிரவு வாரணாசி வந்தார். நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய […]

Continue reading …

புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

Comments Off on புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

புஸ்ஸி ஆனந்த் அறிக்கை தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும், உறுப்பினர்கள் […]

Continue reading …

பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான அறிவிப்பு!

Comments Off on பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான அறிவிப்பு!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய விமான நிலையம் அமைக்க, நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் […]

Continue reading …

ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி; பா.வளர்மதி

Comments Off on ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி; பா.வளர்மதி

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பாடம் படித்தவர். தேர்தல் நேரத்தில் எப்படி எல்லாம் அரசியல் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறியுள்ளார். இன்று அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி செய்தியாளர்களிடம், “தேர்தல் தொடர்பாக அறிவுபூர்வமாக சிந்தித்து முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் மற்றும் […]

Continue reading …

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Comments Off on தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. ரிட் தாக்கல் செய்ய […]

Continue reading …

மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம்! உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம்! உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]

Continue reading …

மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை; தேமுதிக திட்டவட்டம்!

Comments Off on மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை; தேமுதிக திட்டவட்டம்!

தேமுதிக வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும், பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக […]

Continue reading …

அமைச்சர் தந்தையின் மறைவுக்கு- முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on அமைச்சர் தந்தையின் மறைவுக்கு- முதலமைச்சர் இரங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர்.சா.பெருமாள்சாமி மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது […]

Continue reading …