
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், “கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி […]
Continue reading …
மணிப்பூர் மாநில அரசு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என மணிப்பூர் அரசு கருதுகிறது என்றும், யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது […]
Continue reading …
பல ஆண்டுகளாக திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் […]
Continue reading …
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், இந்த ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுங்கள், வேலைக்கு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் இதுகுறித்து கூறும்போது, “அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் இந்த மாதத்திற்கான நிலுவைத் தொகையை மட்டும் வழங்கினால் போதும். தற்போதைக்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு 18 மாதம் DA வர வேண்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பொங்கல் […]
Continue reading …
மாலத்தீவில் உள்ள அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு விசிட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். இதனால் மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாலத்தீவு அதிபருக்கே எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து அவருடைய பதவிக்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவி ஏற்றதிலிருந்து அவர் இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் குறித்து அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் […]
Continue reading …
ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. பலருக்கு லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை எனவே உங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பலருக்கும் வெள்ள நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. லிஸ்டில் பெயர் இல்லை என்ற பதில் தான் வருகிறது என்றும் பொதுமக்கள் குமுறி வருகின்றனர். பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 ஆவது கிடைக்குமா என்று நினைத்த பலருக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது. இதனால் […]
Continue reading …
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா. தற்போது அவர் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத் தன் மேல் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள அவதூறு […]
Continue reading …
ஏற்கனவே 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அந்த தேதிகளை ஒட்டி நாடாளுமன்ற தேர்தல் தேதி வந்தால் பொது தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ், “10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை. பொது தேர்வு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் தான் மக்களவைத் தேர்தல் தேதி […]
Continue reading …
ஜெயக்குமார் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி குறித்து அவர் பதிலளித்துள்ளார். வரும் 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே […]
Continue reading …
தமிழகத்தில் அதானி நிறுவனம் தமிழகத்தில் ரூ.42,000 கோடிக்கான முதலீடுகளை கையெழுத்திட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் பேசும்போது, “தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியடைய வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்துக்கள் சொன்னேன். தற்போது தமிழ்நாடு அரசு ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம், இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தமிழ்நாடு அரசு இன்னும் குறிக்கோளை உயர்த்தி உழைக்க வேண்டும்; என் மண் என் மக்கள் […]
Continue reading …