Home » Archives by category » அரசியல் (Page 71)

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா?

Comments Off on உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா?

உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு துணை முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதல் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், முதலில் அமைச்சர் பதவிகளை ஏற்காவிட்டாலும் பின்பு அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சமீபகாலமாக திமுகவில் நடைபெறும் எந்நிகழ்ச்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து பிளெக்ஸ், பேனரிலும் அவரது படம் […]

Continue reading …

உபி அரசின் உத்தரவு!

Comments Off on உபி அரசின் உத்தரவு!

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வரும் 22ம் தேதி வரை ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரப் பிரதேசம் மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை அடுத்து மாநில போக்குவரத்து துறை இன்று முதல் வரும் 22ம் தேதி முதல் வரை உத்தரப்பிரதேச பேருந்துகளில் ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று உத்தரவு […]

Continue reading …

அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Comments Off on அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

இன்று சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி பேட்டி!

Comments Off on அமைச்சர் உதயநிதி பேட்டி!

நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்தேன். இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை தந்தேன். முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்தேன். திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் […]

Continue reading …

திமுவுக்கு கெடு விதித்த ஜவாஹிருல்லா!

Comments Off on திமுவுக்கு கெடு விதித்த ஜவாஹிருல்லா!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவுக்கு கெடுவிதித்துள்ளார். இதுகுறித்து அவர் “தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு […]

Continue reading …

பாஜக மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Comments Off on பாஜக மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் போது எனது பிரச்சாரத்தை தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “பாஜக என்னை கைது செய்ய விரும்புவது நேர்மையை கைது செய்ய விரும்புவதற்கு சமம், எனது மிகப்பெரிய சொத்து நேர்மை தான். அதை அவர்கள் கெடுக்க விரும்புகிறார்கள், எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என […]

Continue reading …

மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ்; ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா!

Comments Off on மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ்; ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என்றும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தி நமது தேசத்தின் அடித்தளத்தை எழுப்புகிறது. முன்னதாக ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள்!

Comments Off on எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. எனவே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீது பல விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து, […]

Continue reading …

“கலைஞர் 100 விழா”- ரஜினி, கமலுக்கு அழைப்பு!

Comments Off on “கலைஞர் 100 விழா”- ரஜினி, கமலுக்கு அழைப்பு!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை உள்ளிட்ட பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு […]

Continue reading …

ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

Comments Off on ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்னும் ஒரு சில மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ். பேட்டியில், “அமமுகவுடன் எங்கள் அமைப்பு இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரிடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது. இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது. அது தெரிய […]

Continue reading …