
முதலமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி ஒரு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்து வருகிறது. அங்குள்ள குண்டூரைச் சேர்ந்த வர்மா (40) அதே பகுதியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அக்கடனை வர்மா திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பைனான்சியர் இன்னும் பணம் கொடுக்க […]
Continue reading …
ஒய்எஸ்ஆர்சிபிச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ தனக்கு தொடர்பானது அல்ல, போலியானது என்று அவர் கூறியுள்ளார். கோரண்ட்லா மாதவ் இந்துப்பூர் பகுதியின் ஒய்எஸ்ஆர்சிபி எம்.பி.யாக உள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ போலியானது என்று எம்பி கோரண்ட்லா மாதவ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இச்செயல் […]
Continue reading …
ஹரித்துவாரிலுள்ள சிறைச்சாலையில் 40 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா 4 வது அலை விரைவில் வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரிலிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில், ஒரு கைதிக்கு தொடர் காய்ச்சல் நிலவியது. இதையடுத்து. மற்ற சிறைக் கைதிகளைப் பரிசோதனை செய்ததில், மொத்தம் 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகியுள்ளது. கொரொனா […]
Continue reading …
தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்புகள் தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் கடந்த 2020ம் ஆண்டு கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நம்மை பாடாய் படுத்தி வருகிறது. மருத்துவ வல்லுனர்கள் விரைவில் கொரொனா 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில் […]
Continue reading …
தற்போது கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை இம்மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]
Continue reading …
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்துள்ளது. அதன்படி ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் பிரபலமானதால் இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகிறது. இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அவ்வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி 5 […]
Continue reading …
உத்தரகாண்ட் மாநிலத்தில் மனைவியை 72 துண்டுகளாக வெட்டிய கணவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2010ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் மனைவியைக் கொன்று அவரது உடலை 72 துண்டுகளாக குலாட்டி என்பவர் வெட்டியுள்ளார். இவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை பெற்று வரும் குலாட்டிக்கு […]
Continue reading …
ஒடிசாவில் ஆசிரியர் மாணவர்களை அடித்ததால் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்துள்ளார். இதில் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு மாணவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர். மேலும் அந்த […]
Continue reading …
திரவுபதி முர்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகளை குறிப்பிட்டார். குறிப்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டார். “வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ஆகியோர்கள் புதிய உயரங்களை அளித்துள்ளனர். மேலும் உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் […]
Continue reading …
இசைஞானி இளையராஜா எம்.பி. ஆக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். “இளையராஜா எனும் நான்” – ‘கடவுளின் பெயரால்’ எனக்கூறி எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்தபோது இசைஞானி இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக முன்மொழிந்தார். இதில் இளையராஜா அல்லாமல் மற்ற மூவரும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது எம்.பி ஆக […]
Continue reading …