
திரவுபதி முர்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகளை குறிப்பிட்டார். குறிப்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டார். “வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ஆகியோர்கள் புதிய உயரங்களை அளித்துள்ளனர். மேலும் உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் […]
Continue reading …
இசைஞானி இளையராஜா எம்.பி. ஆக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். “இளையராஜா எனும் நான்” – ‘கடவுளின் பெயரால்’ எனக்கூறி எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்தபோது இசைஞானி இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக முன்மொழிந்தார். இதில் இளையராஜா அல்லாமல் மற்ற மூவரும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது எம்.பி ஆக […]
Continue reading …
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அப்படகில் இருந்தவர்களும் தண்ணீரில் மூழ்கினர். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]
Continue reading …
ஏற்கனவே குரங்கு அம்மையால் கேரளாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் […]
Continue reading …
மருத்துவர் ஏழை-எளிய மக்களுக்காக ரூ.600 கோடி சொத்துகளை கொடுத்துள்ளார். மருத்துவர் அரவிந்த் கோயல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் தனது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை உத்தரபிரதேச மாநில அரசுக்கு கொடுத்துள்ளார். இவர் பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Continue reading …
ரயில்வே துறைக்கு அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் தகவல் அளித்துள்ளார். வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பல ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்து வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில்களில் […]
Continue reading …
நாளை தேசிய விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரைப்படமான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ போன்ற திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக […]
Continue reading …
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களையச் சொன்ன 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேரளாவில் நீட் தேர்வு எழுத கடந்த ஞாயிறன்று வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் […]
Continue reading …
குரங்கு அம்மை நோயால் ஏற்கனவே கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது இரண்டாவது நபர் ஒருவருக்கும் குரங்குஅம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை கூறுகையில் “குரங்கு அம்மை நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். வாயின் உள்பகுதியில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏற்கனவே ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த […]
Continue reading …
இஞ்சினியர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர் மீது அனைத்து பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் சிவசங்கர் பாபு. இவர் ஆந்திரா மாநிலம குண்டூரை சேர்ந்தவர். இவர் திருமணத் தகவல் மையங்களில் தனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விளம்பரம் செய்து, விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்ந்து கொண்டு பேசியுள்ளார். இவர் மீது சில பெண்கள் காதலில் விழுந்துள்ளனர். அவர்களிடமிருந்து, நகைகள், மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் சிவசங்கர் […]
Continue reading …