Home » Archives by category » இந்தியா (Page 119)

புதுவைப் பல்கலை பேராசிரியருக்கு ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது !

Comments Off on புதுவைப் பல்கலை பேராசிரியருக்கு ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது !

புதுவை : வி.எச்.என். செந்திகுமார நாடார் தன்னாட்சி கல்லூரியில் “தாவரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் துறை பேராசிரியர். அ. தினகர ராவுக்கு தாவர அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக தாவர ஆராய்ச்சிக்கான சங்கத்தின் (SPR) மதிப்புமிக்க ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் அ.தினகர ராவ் இருபதாண்டுகளுக்கும் மேலாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தாவர […]

Continue reading …

ஆந்திராவில் 80 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை!

Comments Off on ஆந்திராவில் 80 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை!

13 வயது சிறுமியை ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 80 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் 13 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் தன் தாய், தந்தையரோடு வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் தாய் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் தந்தையோடு வசித்து வந்துள்ளார் சிறுமி. சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பழக்கமான சொர்ணகுமாரி என்பவர் சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாக சிறுமியின் […]

Continue reading …

பிரதமர் மோடி இளையராஜாவுக்கு நன்றி!

Comments Off on பிரதமர் மோடி இளையராஜாவுக்கு நன்றி!

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1500க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளை பெற்றுள்ளார்.   பிரதமர் மோடி அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானர் என இசைஞானி இளையராஜா புகழ்ந்து ஒரு நூலிற்கு அணிந்துரை எழுதிய நிலையில், மோடி, இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “மோடியும் அம்பேத்கரும்“ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. இப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. […]

Continue reading …

மாடுகளுக்கு கட்டாயம் லைசென்ஸ்!

Comments Off on மாடுகளுக்கு கட்டாயம் லைசென்ஸ்!

மாடுகளை வளர்க்க லைசென்ஸ் கட்டாயம் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள் எருமை மாடுகள் வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாடுகள் நகர்ப்புறங்களில் வழிதவறி சுற்றித்திரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ராஜஸ்தான் […]

Continue reading …

ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!

Comments Off on ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒருபக்கம். இன்று பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ள நிலையில் இன்னொரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.76.26 ஆக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரூபாயின் […]

Continue reading …

புதிய ராணுவ தளபதி நியமனம்!

Comments Off on புதிய ராணுவ தளபதி நியமனம்!

இந்திய ராணுவத்தில் புதிய ராணுவ தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருக்கும் தளபதி ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்திய ராணுவத்தின் தலைவராக இருப்பவர் நரவனே. இவர் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மனோஜ் பாண்டே ஒரு பொறியாளர் என்றும், இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு பொறியாளர் […]

Continue reading …

கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Comments Off on கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

இன்று காலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீச்சி அடைந்த நிலையில் இருந்தது. ஆனால் சற்று முன்னர் திடீரென உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நூத்தி 112.68 டாலராக உயர்ந்துள்ளது. இன்று காலை கச்சா எண்ணெய் இறங்குமுகமாக இருந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நாளை இந்தியா உட்பட […]

Continue reading …

தமிழக அரசு இடம் ஒதுக்கியவுடன் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் !

Comments Off on தமிழக அரசு இடம் ஒதுக்கியவுடன் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் !

மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி […]

Continue reading …

போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!

Comments Off on போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் […]

Continue reading …

ஈஸ்டரை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து !

Comments Off on ஈஸ்டரை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து !

ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்,  “ஈஸ்டர் நன்னாளை முன்னிட்டு அனைத்து மக்கள், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கும் கிறித்தவ சமுதாயத்தினருக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.   அன்பு, தியாகம் மற்றும் மன்னித்தலின் வழியை நாம் பின்பற்ற ஊக்கமளிக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டர் ஆகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக இணைந்து பணியாற்றுவோம்.  ஒற்றுமையின் முக்கியத்துவத்தை […]

Continue reading …