Home » Archives by category » இந்தியா (Page 130)

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!

Comments Off on மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச் சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதரகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் […]

Continue reading …

கண்ணீர் வேண்டாம்…பெருமிதம் கொள்வோம்-அன்புமணிஇராமதாஸ்!

Comments Off on கண்ணீர் வேண்டாம்…பெருமிதம் கொள்வோம்-அன்புமணிஇராமதாஸ்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப் படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ளவேண்டும். ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் […]

Continue reading …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

Comments Off on பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி  ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது.  ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட […]

Continue reading …

எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது !

Comments Off on எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது !

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது. மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக […]

Continue reading …

நாகூரில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிய கட்டிட திறப்பு!

Comments Off on நாகூரில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிய கட்டிட திறப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முதன் முதலாக திறக்கப்பட்ட வங்கி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியாகும். அக்டோபர் 1977ல் நாகூர் தெருப்பள்ளி தெருவில் திறக்கப்பட்டு சிறப்பாக 44 வருடங்களாக இயங்கிவந்தது. கட்டிட மேம்பாடு தேவையின் காரணமாக இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிதான கட்டிடத்தில் நாகூர் மெயின் ரோடு அரசு மருத்துவமனை எதிரே இன்று திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைக்கினங்க பல்வேறு புதிய வசதிகள் இங்கு ஏற்படுத்தபட்டுள்ளன. புதிய வங்கி அலுவலகத்தை நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும் முன்னாள் தர்கா பிரசிடன்டுமான செய்யது […]

Continue reading …

மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு – பெ. மணியரசன்!

Comments Off on மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு – பெ. மணியரசன்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு […]

Continue reading …

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் – மருத்துவர் இராமதாசு !

Comments Off on மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் – மருத்துவர் இராமதாசு !

தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் […]

Continue reading …

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

Comments Off on தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]

Continue reading …

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை கோவைக்கு எத்தனையாவது இடம்?

Comments Off on இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை கோவைக்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை கோவைக்கு எத்தனையாவது இடம்? இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் சென்னை மற்றும் கோவை ஆகிய 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன இந்தியாவில் வாழ தகுதியான நகரங்களின் முதல் இடத்தில் பெங்களூர் நகரம் இடம்பெற்றுள்ளது இதனை அடுத்து இரண்டாவதாக புனே, மூன்றாவதாக அகமதாபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன நான்காவது இடத்தில் சென்னை […]

Continue reading …

அடிக்கடி சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் :எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Comments Off on அடிக்கடி சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் :எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா வைரஸ் ஆனது தற்போது கேரளா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா வைரஸால் அன்றாடம் பயன்படுத்தும் மாஸ்க் மற்றும் சானிடைசராலும் பல தீமைகள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. அந்த வகையில், கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் […]

Continue reading …