கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன? கொரோனா தொற்றில் இருந்து நீண்டநாள் சிகிச்சைக்கு பின்பு மீண்ட கனிகா கபூர் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வந்த நிலையில் ஏற்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி லண்டன் சென்றுவிட்டு லக்னோ திரும்பினார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின் […]
Continue reading …இந்திய இராணுவம் உலகில் மூன்றாவது மிக பெரிய இராணுவம், 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்களின் போது கணிசமான தொகை இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை இராணுவத்தில் செய்து வருகிறது, இந்திய இராணுவ வீரர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் காலணிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே தற்போது தயாரிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. தற்போது அதில் மேலும் […]
Continue reading …கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று நிதி அமைச்சர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் முக்கிய அறிவிப்புக சிலவற்றை வெளியிட்டார். […]
Continue reading …இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை சீராக்க ரூபாய்.20 லட்சத்திற்கான புதிய திட்டத்தை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டு பேசிவருகிறார். இந்த திட்டதை பல்வேறு தரப்பினரோடு கலந்து ஆலோசித்து தான் இந்த பொருளாதார தொகுப்பை உருவாகியுள்ளது. மேலும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைக்க அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளச்சியை உண்டாகும் வகையில் “சுயசார்பு பாரதம்” என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஜன்தன், ஆதார் மூலம், […]
Continue reading …புது டெல்லி,மே 13 வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020 ல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020 இல் தொடங்கியது. இந்தத் […]
Continue reading …மும்பை, மே 13 கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை நிமித்தமாக, தங்களது சொந்த ஊரை விட்டு வந்த பல தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தனர். மும்பையில் அப்படி வந்து தவித்த சுமார் 350 வெளிமாநிலத் தொழிலாளர்களை, வில்லன் நடிகர் சோனு சூட் 10 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அப்போது அவர் […]
Continue reading …சென்னை, மே 12 மத்திய ரயில்வே துறை, புதுடில்லி – சென்னை மற்றும் சென்னை- புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வேதுறை […]
Continue reading …சென்னை,மே 12 வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் […]
Continue reading …புது டெல்லி,மே 11 இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தலைமையிலான சட்ட அதிகாரிகளுடன் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காணொளி மூலம் கலந்துரையாடினார். நாம் இப்போது சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம், இந்தச் சவால்களை சரியான வழியில் கையாள்வதற்கு அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆலோசித்து வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்திச் செல்கிறார் என்று சட்ட அமைச்சர் தனது தொடக்க உரையில் கூறினார். முடக்கநிலை […]
Continue reading …புது டெல்லி,மே 11 உலக அளவிலான பெரும் தொற்றான கோவிட்-19 நோய் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற இந்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கேசரி என்ற கப்பல், மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர், காமராஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப்பொருள்கள், ஹைட்ரோகுளோரிக்வின் மாத்திரைகள் உட்பட, கோவிட்-19 தொடர்பான மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களுடன் 2020, மே10 அன்று புறப்பட்டுச் சென்றது. மிஷன் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உதவித் திட்டம், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், நோயின் பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்களுக்கும், இந்த மண்டலத்தில், […]
Continue reading …