
புது டெல்லி,மே 11 பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …
புது டெல்லி,மே 09 மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், தெலுங்கானாவின் சுகாதார அமைச்சர் எடிலா ராஜேந்திரன் மற்றும் கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் ஆகியோருடனான உயர்நிலைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் முன்னிலையிலான இக்கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கோவிட்-19 மேலாண்மைக்கான நிலைமைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஆயத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து […]
Continue reading …
புது டெல்லி,மே 09 புகழ்பெற்ற கைலாஷ் – மனாசரோவர் யாத்திரை வழித்தடத்தில், தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக்( சீன எல்லை) வரை சாலைத்தொடர்புப் பணியை நிறைவு செய்த எல்லை சாலைகள் அமைப்பின் முயற்சியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். இந்தச் சாலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காணொளிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்து, பித்தோரகாரிலிருந்து முதல் வாகனத் தொகுதி செல்வதற்குக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]
Continue reading …
சென்னை,மே 8 மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 9550 இடங்களில், வெறும் 371 இடங்கள், அதாவது 3.80% இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5&ஆம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் […]
Continue reading …
புது டெல்லி,மே 08 விசாகப்பட்டிணத்தில் நடந்த வாயுக் கசிவு விபத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் குறித்து ஆய்வு செய்ய, உயர் மட்டக் கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தலைமைத் தாங்கினார். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கும், பெரும் விபத்து நடந்த இடத்தை கையகப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நீண்ட ஆலோசனையை அவர் நடத்தினார். பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர், அமித் ஷா, உள்துறை இணை அமைச்சர்கள், நித்யானந்த் ராய் மற்றும் […]
Continue reading …
புது டெல்லி,மே 07 வணக்கம் புத்த பூர்ணிமாவிற்கான நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் புத்தபிரானைப் பின்பற்றுபவர்களுக்கும் வேசக் கொண்டாட்டங்களுக்கான நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித நன்னாளில் உங்களைச் சந்திப்பதும், உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களையும் பெறுவதும் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதற்கு முன்னரும் எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பல கிடைத்துள்ளன. 2015, 2018 ஆம் ஆண்டுகளில் தில்லியிலும், 2017 ஆம் ஆண்டில் கொழும்பிலும் இந்தக் கொண்டாட்டங்களில் உங்களுடன் ஒரு பகுதியாக, நானும் இருந்தேன். நண்பர்களே புத்தபிரான் கூறியுள்ளதாவது : मनोपुब्बं-गमाधम्मा, मनोसेट्ठामनोमया, இதற்குப் பொருள் என்னவென்றால் தம்மம் மதம் மனதில்தான் உள்ளது. மனம்தான் உயர்ந்த […]
Continue reading …
புது டெல்லி,மே 06 புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “புத்த பிரானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். உண்மை, அறம், நேர்மையின் பாதையில் பயணிக்குமாறு மனித குலத்தை ஊக்குவித்தவர் புத்தபிரான். அவரது போதனைகள், ஆன்மீக விழிப்புணர்வின் வாயிலாக மக்களை விடுதலை பெறச் செய்யும் வழியைக் காட்டின. அமைதி, […]
Continue reading …
புது டெல்லி,மே 06 புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : புத்த பூர்ணிமா சுபதினத்தையொட்டி, எனது சக குடிமக்கள் அனைவருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள புத்த பகவானைப் பின்பற்றுபவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றுடன் அஹிம்சை அடிப்படையில் மனிதநேயத் தொண்டாற்ற புத்தபகவானின் போதனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன. அவரது வாழ்க்கையும், இலட்சியங்களும், சமத்துவம், நல்லிணக்கம், நீதி போன்ற நிலைத்து நிற்கும் விழுமியங்கள் […]
Continue reading …
கோவை, மே 6 கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஈஷா யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது […]
Continue reading …
புது டெல்லி,மே 05 கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக தேசிய மாணவர் படை (NCC) ஆற்றியுள்ள பங்கு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 17 NCC இயக்குநரகங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர், இதுபோன்ற மாநாட்டின் மூலம் உரையாடுவது இதுவே முதன் முறையாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜித் குமார் ஆகியோரும் பங்கேற்றனர். […]
Continue reading …