
17 வயது சிறுவன் புனேவில் கார் விபத்தை ஏற்படுத்தினான். அச்சிறுவனின் தாத்தா ஏற்கனவே ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் அவர் தீவிரவாதியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மது போதையில் கடந்த சில நாட்களுக்கு முன் 17 வயது சிறுவன் கார் ஓட்டியபோது, இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சிறுவன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற டெம்போ வேனில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. […]
Continue reading …
முன்னாள் பிரதமரான தேவகவுடா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தாத்தாவாகிய முன்னாள் பிரதமரான தேவகவுடா எச்சரிக்கையில், ‘சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பிரஜ்வால் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார்கள், எல்லாம் என் கவனத்திற்கு வந்தது, பொறுமைக்கும் எல்லை உண்டு” என பேரனுக்கு […]
Continue reading …
டெல்லியில் ஏசி பேருந்துகளை இயக்குவதற்கு மாநில அரசு ஊபர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஊபர் நிறுவனம் இதுகுறித்து, “உள்ளூர் அளவில் செயல்பட்டு வரும் வாகன பார்ட்னர்களுடன் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்படும், 19 முதல் 50 பயணிகள் வரை இந்த ஏசி பேருந்தில் பயணம் செய்ய முடியும். உபர் செயலின் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வழித்தடத்தையும் தேர்வு செய்து […]
Continue reading …
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜக மீதோ, மோடி மீதோ மக்கள் மத்தியில் கோபம் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதே அளவு வெற்றி பெறும் அல்லது அதைவிட சிறப்பாக வெற்றி பெறும் என்று தான் கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் முடிவை தலைகீழாக புரட்டிப் போடும் வகையில் மக்களுக்கு மத்திய அரசு மீது எந்த கோபமும் இல்லை. ஒரு […]
Continue reading …
போதை மாத்திரைகள், கொகைன் ஆகியவை பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்த பார்ட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பார்ட்டியில் 30 இளம் பெண்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பண்ணை இல்லத்தில் வாசு என்பவர் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் அதில் 30 பேர் இளம்பெண்கள் என்றும் கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பார்ட்டி விடிய விடிய நடந்ததாகவும் டான்ஸ், பாடல்கள் ஆட்டம் […]
Continue reading …
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தாய் இறந்தது தெரியாமல் பட்டினி கிடந்து பலியாகினார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள தாசனஹடியைச் சேர்ந்த 62 வயதான ஜெயந்தி ஷெட்டி. இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனது மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயது மகள் பிரகதியுடன் ஜெயந்தி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் சர்க்கரை வியாதி காரணமாக ஜெயந்தியின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. அதன்பின்னரும் அவர் தன்னையும் பார்த்துக் கொண்டு தனது மனநலம் குன்றிய மகளையும் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். […]
Continue reading …
திடீரென 9900 கோடி ரூபாய் விவசாயி வங்கி கணக்குக்கு வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளார். உத்தரப்பிரதேச சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது அதில் 9900 கோடி ரூபாய் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி நிர்வாகியிடம் கூறிய போது வங்கி அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது கணக்கை ஆய்வு செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு […]
Continue reading …
இன்று முதல் முதலாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் கனடா குடியுரிமை வைத்திருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது. கனடா குடியுரிமையை திரும்ப கொடுத்துவிட்டு அவர் இந்திய குடியுரிமை கேட்டு பெற்றார். இந்திய குடியுரிமை பெற்றபின் அவர் முதல் முதலாக இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம், “இந்தியா வளர்ச்சி […]
Continue reading …
பெண் மருத்துவர் ஆந்திராவில் சிறுவனுக்கு திடீரென இதயம் என்ற நிலையில் அவரைப் முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார். ஆந்திராவில் விஜயவாடாவில் 6 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அந்த சிறுவன் தூக்கி எறியப்பட்டு பேச்சு மூச்சு இன்றி கீழே விழுந்துவிட்டார். சிறுவனின் தந்தை அலறி அடித்துக் கொண்டு தனது மகனை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த வழியாக மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் ரவள்ளி சென்று கொண்டிருந்தபோது […]
Continue reading …