Home » Archives by category » இந்தியா (Page 33)

அடுத்தாண்டு முதல் இரண்டுமுறை பொதுத்தேர்வு!

Comments Off on அடுத்தாண்டு முதல் இரண்டுமுறை பொதுத்தேர்வு!

மத்திய அமைச்சர் விரைவில் ஆண்டிற்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக ஆட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. தற்போது ஆண்டிற்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இனி, ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 2025 -2026ம் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும் என மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி […]

Continue reading …

தூங்காமல் படிக்க மாத்திரை உட்கொண்ட மாணவி!

Comments Off on தூங்காமல் படிக்க மாத்திரை உட்கொண்ட மாணவி!

பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் கண்விழித்து படிக்க மாத்திரை உட்கொண்டதால் மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதி தேர்வு குறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கான நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முழு ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது மாணவ, மாணவர்களின் கனவாக உள்ளது. அதற்காக இரவில் நீண்ட நேரம் படித்து வருகின்றனர். அவ்வகையில் லக்னோவில் பொதுத்தேர்வுக்கு நீண்ட நேரம் […]

Continue reading …

பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

Comments Off on பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

இளைஞர் ஒருவர் தனது பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் இன்றைய காலத்தில் மிகவும் ஆடம்பரமாகவும், அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி ஆடம்பரமாக செய்ய திருமணத்திற்காக பல லட்சம், கோடிகளை செலவழித்து வசதியான பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைக்கின்றனர். வசதியற்றோர் தங்கள் வசதிக்கேற்றபடி திருமணம் செய்கின்றனர். திருமணத்தின் போதும், திருமணம் நிச்சயதார்த்தத்தின்போது, மணமக்கள் அலங்காரம் செய்து அழகுப்படுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், […]

Continue reading …

முதல் முறையாக மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு!

Comments Off on முதல் முறையாக மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு!

சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் முதல் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து கடந்த 14ம் தேதி ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு […]

Continue reading …

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து!

Comments Off on சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து!

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 30ம் சண்டீகர் மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு […]

Continue reading …

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!

Comments Off on பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!

டில்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சிலர் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. இதையொட்டி பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. […]

Continue reading …

தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

Comments Off on தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக பா.ஜ.க. கட்சித் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்காக தமிழகம் முழுதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் […]

Continue reading …

முன்னாள் எம்.எல்.ஏவை ஏமாற்றிய போலி அமித்ஷா!

Comments Off on முன்னாள் எம்.எல்.ஏவை ஏமாற்றிய போலி அமித்ஷா!

மத்திய அமைச்சர் அமித்ஷா போல பேசி முன்னாள் எம்.எல்.ஏவிடம் மர்ம கும்பல் பேசி பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த கிஷன்லால் உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர். சமீபத்தில் கிஷன்லாலுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனவும், நாடாளுமன்ற தேர்தலில் கிஷன்லாலுக்கு எம்.பி சீட் தர தயாராக உள்ளதாகவும், அதற்கு அவர் சில லட்சங்கள் தர வேண்டும் […]

Continue reading …

அபுதாபியில் இந்து கோவில்! பிரதமர் மோடி திறந்து வைப்பு!

Comments Off on அபுதாபியில் இந்து கோவில்! பிரதமர் மோடி திறந்து வைப்பு!

பிரதமர் மோடி அபுதாபியில் 900 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு […]

Continue reading …

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Comments Off on சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. இதற்காக பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் […]

Continue reading …