
மத்திய அரசு இந்தியா டூ மியான்மர் எல்லை முழுவதையும் வேலி அமைத்து தடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு மணிப்பூர் இனக்குழுக்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மணிப்பூரின் மெய்தி இனக்குழுவினருக்கும், குகி இனக்குழுக்களுக்கும் இடையே கடந்தாண்டு முதலாக தொடர் மோதல் வன்முறைகள் நடந்து வருகிறது. மணிப்பூர் டூ மியான்மர் இடையேயான எல்லையை வேலி அமைத்து மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டில் அண்டை நாடான மியான்மரில் ஆங் சான் சூகியின் மக்களாட்சியை […]
Continue reading …
டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் வரிப் பகிர்வுக் கொள்கைகளை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சமமான நிதி பகிர்வு இல்லை என்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கிய அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் கர்நாடகா குற்றம் சாட்டியிருந்தது. இதை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. டில்லி ஜந்தர் மந்தரியில் நடைபெற்ற […]
Continue reading …
அம்மா உணவு சமைத்து தராததால் அவரது மகனே அவரை கொலை செய்துள்ளார். கர்நாடகம் மாநிலம் பெங்களூர் கே.ஆர். புரம் பீமய்யா லே அவுட் பகுதியில் வசிக்கும் சந்திரப்பா மற்றும் இவரது மனைவி நேத்ரா(40) தம்பதிக்கு 17 வயதில் உள்ளார். இவர் கோலார் மாவட்டம் மும்பாகலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேத்ரா ஆடம்பர பிரியை என்றும் அவருக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததால் வீட்டில் சரியாக சமைக்காமல், வெளியில் அடிக்கடி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், […]
Continue reading …
பிரதமர் மோடி தலைமையிலான குழுவின் கூட்டம் இன்று புதிய தேர்தல் ஆணையர் யார்? என்பது குறித்து முடிவு செய்ய இன்று டில்லியில் கூடியது. இன்று பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய கூடுகிறது. பிரதமர் மோடி பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி முதல் […]
Continue reading …
தந்தை ஒருவர் தனது 11 வயது, 12 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கில் அவருக்கு 123 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 11 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தந்தையின் பாலியல் தொல்லையை பொறுக்க முடியாத இரண்டு […]
Continue reading …
உத்தவ் தாக்கரே இதுவரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசியிருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதிஷ்குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே “நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார். மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட […]
Continue reading …
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ் அழகிரி நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, […]
Continue reading …
கேரள அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள […]
Continue reading …
சமீபத்தில் புதிய நாடாளுமன்றாத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனர். தென் மாநிலங்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதுடன், நாளை கர்நாடகம் அரசு சார்பில் டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் […]
Continue reading …
பட்டாசு ஆலையில் எற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. மத்திய பிரேதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
Continue reading …