Home » Archives by category » இந்தியா (Page 4)

சர்வதேச ஒலிம்பிக் திட்டவட்டம்; வினேஷ் போகத் நீக்கத்தில் மாற்றமில்லை!

Comments Off on சர்வதேச ஒலிம்பிக் திட்டவட்டம்; வினேஷ் போகத் நீக்கத்தில் மாற்றமில்லை!

சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. மீண்டும் […]

Continue reading …

தமிழக காங்கிரஸ் மீது டில்லியில் புகாரளித்த திமுக?

Comments Off on தமிழக காங்கிரஸ் மீது டில்லியில் புகாரளித்த திமுக?

கடந்த சில வாரங்களாக தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. திமுக சீனியர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்த போது இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனியர் அமைச்சர்கள், திமுகவுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு வெற்றி பெற்ற பிறகு நம்மை மதிப்பதே இல்லை என்று தலைமையிடம் புகார் கூறியதாக தெரிகிறது. இதை […]

Continue reading …

நிலச்சரிவில் பாதித்த வீடுகளுக்குள் புகுந்து திருடும் கும்பல்!

Comments Off on நிலச்சரிவில் பாதித்த வீடுகளுக்குள் புகுந்து திருடும் கும்பல்!

மனிதநேயம் என்பது துளி இல்லாத நிலையில் சில கும்பல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிந்த வீடுகளுக்குள் புகுந்து பணம், நகை திருடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திடீரென்று கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 3 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. தோண்டும் இடமெல்லாம் பிணங்களாக உள்ளது. தற்போது வரையிலும் பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. மேலும் 200 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பகாக […]

Continue reading …

ராமகிருஷ்ண ஆசிரமம் பள்ளி மீது வழக்கு!

Comments Off on ராமகிருஷ்ண ஆசிரமம் பள்ளி மீது வழக்கு!

மாணவன் பேனா திருடியதாக ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்க வைத்த பிரபலமான ராமகிருஷ்ண ஆசிரம பள்ளி. கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் குடும்ப வறுமை காரணமாக பல கிராமத்து சிறுவர்கள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர். அருகே உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த அருண் என்ற சிறுவனும் அவனது தம்பி தருண் என்ற சிறுவனும் அங்கு தங்கி படித்து வந்துள்ளனர். தருண் அங்கு 3ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சமீபத்தில் தருண் தனது பேனாவை திருடி […]

Continue reading …

உடல் கிடைக்காததால் மகளின் கைக்கு இறுதி சடங்கு செய்த தந்தை!

Comments Off on உடல் கிடைக்காததால் மகளின் கைக்கு இறுதி சடங்கு செய்த தந்தை!

தந்தை ஒருவர் கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தனது மகளின் ஒற்றை கையை வைத்து இறுதி சடங்கு செய்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் கேரளாவில் சூரல்மலை உள்ளிட்ட 3 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டவர்களை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பல இடங்களில் இறந்தவர்களின் கை, கால்கள் என உடல் பாகங்கள் தனியாக கிடைப்பதால் அது யாருடையது என கண்டுபிடிப்பதிலும் […]

Continue reading …

வயநாடு நிலச்சரிவு; கமல் ரூ.25 லட்சம் நிவாரணம்!

Comments Off on வயநாடு நிலச்சரிவு; கமல் ரூ.25 லட்சம் நிவாரணம்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியளித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணி இரவு பகல் என்று பாராமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, மாநில முதலமைச்சர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என நாடு முழுவதும் உதவி கரம் நீட்டப்பட்டு […]

Continue reading …

வயநாட்டில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

Comments Off on வயநாட்டில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

இரண்டு நாட்களுக்கு முன் வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 240 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 30-ம் தேதி அதிகாலை கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று […]

Continue reading …

ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

Comments Off on ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்புவதாக அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தில் நான் பேசிய போது “இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை, இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த […]

Continue reading …

மக்களவையில் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து விளக்கம்!

Comments Off on மக்களவையில் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து விளக்கம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது 2024 மக்கவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் […]

Continue reading …

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; உச்சநீதிமன்றம்!

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; உச்சநீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவை தொடர்ந்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை […]

Continue reading …