Home » Archives by category » இந்தியா (Page 43)

சோனியா காந்தி ஆதங்கம்!

Comments Off on சோனியா காந்தி ஆதங்கம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மத்திய பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விளக்கமளிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த 141 எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிரடியாக -சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றில் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் […]

Continue reading …

ராமர் கோவில் அறக்கட்டளையின் அறிவிப்பு!

Comments Off on ராமர் கோவில் அறக்கட்டளையின் அறிவிப்பு!
ராமர் கோவில் அறக்கட்டளையின் அறிவிப்பு!

ராமர் கோவில் அறக்கட்டளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 4000 சாமியார்கள் 2200 சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். அத்வானிக்கு 96 வயது ஆவதாலும், ஜோஷிக்கு 90 வயது ஆவதால் இருவரும் வயதை கணக்கில் கொண்டு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதி

Comments Off on மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதி
மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதி

மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாவூத் இப்ராகிம் கடந்த 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரும், தாதாவுமான இரண்டு நாட்களுக்கு முன்னதாக கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அவர் அனுமதிக்கப்பட்ட தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை எனவும், அந்த மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகிம் 2வது திருமணம் செய்து கொண்டு கராச்சியில் தங்கியிருப்பதாக அவரது சகோதரர் என்.ஐ.ஏவிடம் கூறியிருந்த நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு விஷம் […]

Continue reading …

ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Comments Off on ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

இன்று ஒரே நாளில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் சமீபத்தில் இருவர் புகுந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் […]

Continue reading …

சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Comments Off on சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய அரசு சாம்சங் கேலக்ஸி செல்போன் பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன்களில் ஒன்று. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சாம்சங் கேலக்ஸி பயன்படுத்துவார்கள் தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் போன்றவை ஹேக் செய்யப்படுவதாக சமீபகாலமாக அதிகமாக புகார் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பின் நம்பர் போட்டும் விரல் ரேகை பயன்படுத்தியும் தங்களது செல்போன் லாக் செய்யப்பட்டு இருப்பதாகவும் தங்களது சமூக வலைதளங்களை […]

Continue reading …

சோமாலியா கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதா?

Comments Off on சோமாலியா கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதா?

இந்திய கப்பற்படை கப்பல்கள் அரபிக்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை மீட்பதற்காக விரைந்துள்ளன. கடற்கொள்ளையர்களின் புகலிடமாக சோமாலியா பகுதியிலிருந்து பிரிந்த பண்ட்லேண்ட் பகுதி திகழ்கிறது. அரபிக்கடல் பகுதிகளில் பயணம் செய்யும் கப்பல்களை கொள்ளையடிப்பது சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு வழக்கமாக உள்ளது. இன்று மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ருயின் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சோமாலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த இந்த கப்பலை வழிமறித்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை கைது செய்து கப்பலையும் கடத்தி கொண்டு செல்கின்றனர். அவர்கள் […]

Continue reading …

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்வி?

Comments Off on காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்வி?
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்வி?

காங்கிரஸ், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையைக் காட்டவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில், கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது […]

Continue reading …

தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Comments Off on தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச முதலமைச்சர் தயார் என தமிழ்நாடு அரசு உத்தநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆளுநர் பல்வேறு மசோதாக்களையும் நிலுவையில் வைத்துள்ள நிலையில் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சாசனம் தொடர்பான விவகாரம். தேநீர் அருந்தி கேக் சாப்பிடுவதன் மூலம் […]

Continue reading …

நாடாளுமன்றத்துக்குள் உச்சக்கட்ட பதற்றம்!

Comments Off on நாடாளுமன்றத்துக்குள் உச்சக்கட்ட பதற்றம்!

இன்று நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கிய போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து இருந்து 2 நபர்கள் குதித்து வந்தனர். அவர்களிடம் வண்ணங்களில் ஆன புகை வீசும் குப்பி இருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை […]

Continue reading …