Home » Archives by category » இந்தியா (Page 59)

மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானமா?

Comments Off on மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானமா?

இந்தியா மட்டுமின்றி உலகளவில் பேசப்படும் ஒரு விவாதமாக மாறி உள்ளது மணிப்பூரில் சில மாதங்களாக நடந்துவரும் கலவரம். ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற இடதுசாரி மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஆறு நாடாளுமன்ற குழுக்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மணிப்பூரின் நிலைமை என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் இத்தீர்மான கோரிக்கை […]

Continue reading …

பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

Comments Off on பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான், அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என்பதை பார்ப்போம்” என்று பதிவு செய்துள்ளார். மூன்றாவது நீதிபதியின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி […]

Continue reading …

368 கிராம பஞ்சாயத்தில் மம்தா கட்சி முன்னிலை!

Comments Off on 368 கிராம பஞ்சாயத்தில் மம்தா கட்சி முன்னிலை!

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 368 கிராம பஞ்சாயத்து இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இவ்வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் கிராமத்து கிராம பஞ்சாயத்து இடங்களில் 368 இடங்களில் […]

Continue reading …

ஒரே மேடையில் அமித்ஷா – ஸ்டாலின்!

Comments Off on ஒரே மேடையில் அமித்ஷா – ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் தமிழகத்தில் 31வது தென்மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக […]

Continue reading …

பேஸ்புக்கின் அதிரடி!

Comments Off on பேஸ்புக்கின் அதிரடி!

மெட்டா நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக தனது புதிய சமூக செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதள செயலிகளில் உலகம் முழுதும் பிரபலமாக முன்னணியில் இருப்பது டுவிட்டர். சமீபத்தில் இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அவர் வாங்கியது முதல் டுவிட்டர் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகாரப்பூர்வ புளூ டிக்கை பெற கட்டணம், டுவிட்டர் பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றால் பயனாளர்கள் பலர் டுவிட்டர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். டுவிட்டர் பயனாளர்களை […]

Continue reading …

உலகின் மிகப்பெரிய விஷ்ணு மரசிலை!

Comments Off on உலகின் மிகப்பெரிய விஷ்ணு மரசிலை!

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதை பார்த்து பரவசமடைந்துள்ளனர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி என்ற கோவிலில் தனியார் நிறுவனம் ஒரே மரத்தால் ஆன உலகின் மிகப்பெரிய விஷ்ணு சிலையை வடிவமைத்துள்ளது. 21 அடி அகலம் 8.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை தான் உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்த […]

Continue reading …

காதல் ஜோடிகள் தற்கொலை!

Comments Off on காதல் ஜோடிகள் தற்கொலை!

கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி தாலூக்கா விஜய நகரில் கோலார் பகுதியில் வசித்து வந்த பவித்ரா அங்குள்ள உர நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த குருபிரசாத் என்பவருடன் நட்பு பின்பு காதலானது. குருபிரசாத் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அதை மறைத்து பவித்ராவை காதலித்து வந்துள்ளார். குருபிரசாத்தின் திருமண விவகாரம் தெரிய வந்தது இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]

Continue reading …

ராகுல் காந்தியை விமர்சித்த அமித்ஷா!

Comments Off on ராகுல் காந்தியை விமர்சித்த அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல், மோசடி தான் இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பல வழிகளில் […]

Continue reading …

பிளாட்பாரத்தில் ரயில் மோதி சிறுவன் பலி!

Comments Off on பிளாட்பாரத்தில் ரயில் மோதி சிறுவன் பலி!

ரயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் மும்மைப ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தின் நின்று இரண்டு சிறுவர்கள் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம் அருகே ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காமல் சிறுவர்கள் கைகளைக் கழுவியபடி இருந்தனர். அதில் ஒரு சிறுவன் கைகளைக் கழுவிட்டு தண்ணீர் குடித்த பின், இன்னொரு சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்தார். உடனே ரயில் அருகில் வரும் சத்தம் கேட்டு, ஓரமாக ஒதுங்கிவிட்டார். ஆனால், […]

Continue reading …

நாளை முதல் பான் கார்டு செல்லாது!

Comments Off on நாளை முதல் பான் கார்டு செல்லாது!

மத்திய அரசு ஏற்கனவே பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது. இன்றுடன் பான் கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை […]

Continue reading …