
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சியில் ஓரணியில் திரள வாருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று உள்ளது. சற்றுமுன் பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார், அப்போது அவர், “எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள அழைப்பு விடுகிறேன். இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாட்டையும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டலடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் பேசியபோது, “2024ம் தேதி மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். மீண்டும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என்பதை உறுதியாக […]
Continue reading …
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் […]
Continue reading …
உள்துறைஅமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமரே நாட்டில் இல்லாத போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறும் போது, “கடந்த 50 நாட்களாக மணிப்ப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரதமர் அமைதி காக்கிறார் தற்போது பிரதமர் நாட்டிலேயே இல்லை இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை வரை தெரிவிக்கவில்லை! இதுவரை ராகுல் காந்தி, மாயாவதி, மு.க.ஸ்டாலின் மற்றும் […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான “ஆதிபுருஷ்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டது. வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக படக்குழுவின் சார்பாக தினமும் செய்தி வெளியிடப்படுகிறது. 3 நாளில் 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. “சக்திமான்” சீரியல் மூலம் பிரபலமான முகேஷ் கண்ணா படத்தில் ராவணனாக […]
Continue reading …
தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ‘தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டினேன்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்ற எம்.பிக்கள் தாங்கள் வென்ற தொகுதிகளில் உள்ள குறைகளை சரி செய்யவும், மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தொகுதி மேம்பாட்டு நிதியாக கணிசமான தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதை அனைத்து எம்.பிக்களுமே நல்ல முறையில் பயன்படுத்துவது இல்லை என்ற புகார்களும் உள்ளன. தெலுங்கானா மாநிலம் […]
Continue reading …
ஆயுதமேந்திர நிறுவனத்திற்குள் நுழைந்த குழம்பல், ஊழியர்களை மிரட்டி ரூ.8 கோடியே 49 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அக்கும்பலைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். நிதிநிறுவனம் ஒன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 10ம் தேதி ஆயுதமேந்திய ஒரு கும்பல் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி ரூ.8 கோடியே 49 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த அம்மாநில போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். […]
Continue reading …
மத்தியபிரதேச மாநிலத்தில் மொரெனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி தோமர் (18) அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 3ம் தேதி ராதிஷ்யம் காணாமல் போனார். அதே தினத்தன்று, ஷிவானியையும் காணவில்லை. இவர்கள் இரு வீட்டாரின் எதிர்ப்புக்கு அச்சம் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக இளைஞரின் பெற்றோர் நம்பி, இதுபற்றி போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த […]
Continue reading …
பெங்களூருவில் மதுபான விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவலறிந்த நிலையில், அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 25 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் பல மதுபான விடுதிகள் உள்ளன. இங்குள்ள மதுபான விடுதிகளில் விபச்சாரம் போதைப் பொருட்களுடன் போதை விருந்து நடைபெறுவதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 60 பேர் கொண்ட போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். உள்ளே, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் […]
Continue reading …