எதிர்க்கட்சிகள் ஒன்றாக ராகுல் காந்தி அழைப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சியில் ஓரணியில் திரள வாருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று உள்ளது. சற்றுமுன் பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார், அப்போது அவர், “எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள அழைப்பு விடுகிறேன். இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாட்டையும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. வெறுப்புணர்வை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்” என்று அவர் தெரிவித்தார்.