
ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வுக்ஸியில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இப்போட்டியில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64வது சுற்றில் பவானி தேவி பெற்றார். இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில் பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி […]
Continue reading …
குஜராத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் தோன்றிய பிபர்ஜோய் புயல் கரையை கடந்ததால் அங்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது. தற்போது அப்புயல் வலுவிழந்து ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய பிபர்ஜோய் புயல், குஜராத் மாநிலம் கட்ச் என்ற மாவட்டத்தில் கரையை கடந்தது. இப்புயலால் அங்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சாய்ந்த மின்கம்பங்கள் […]
Continue reading …
நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடந்தது. இப்புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. புயல் கரையைக் கடந்த 140 கிமீ வேகத்தில், குஜராத்தில் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இப்புயலின்போது, மொத்தம் 1171 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். இதில் 707 கர்ப்பிணிகள் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். இதுபற்றி குஜராத் மாநில சுகாதாரத்துறை முன்பே கர்பிணிகள் பட்டியலை தயார் செய்து இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, […]
Continue reading …
நீதிமன்றம் பாஜக தொடங்கிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சோக்குமார் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட சில விளம்பரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி சித்தாராமையா மற்றும் டி கே சுகுமார் ஆகிய மூவர் மீதும் பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பாஜகவை சேர்ந்த கேசவ பிரசாத் என்பவர் […]
Continue reading …
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் (35) மேற்கு வங்க மாநிலத்தில், வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபியா பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தன் தாயாரை கத்தியால் குத்திக் கொன்றார். அதன்பின்னர், தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றுள்ளார். அந்த சூட்கேசை திறந்து பார்த்த போலீசார் அப்பெண்ணிடம் இதுபற்றி விசாரணை நடத்தி கைது செய்தனர். அப்பெண் கூறியதாவது: “தனக்கு திருமணமாகி கணவர் இருக்கிறார். சம்பவத்தன்று […]
Continue reading …
மணமகன் கருப்பாக இருந்ததால், நடக்கவிருந்த திருமணத்தையே நிறுத்தியுள்ளார் மணமகள். உத்தரபிரதேச மாநிலத்தில் கவுசாம்பி மாவட்டத்தில் பிப்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷெர்பூரில் கடந்த மே 29ம் தேதி ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டு தரப்பிலும் ஜோராக நடந்து கொண்டிருந்தது. திருமண நாளின்போது மாப்பிள்ளை தன் உற்றார் உறவினர்களுடன் பெரிய ஊர்வலமாக பெண்ணின் வீட்டிற்கு வந்தார். மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடைக்கு வந்தார். அப்போது, மணமகனுக்கு மாலை அணிவிக்க மணப்பெண் மறுத்துவிட்டார். அவர் […]
Continue reading …
மதுபோதையில் 7வது மாடியிலிருந்து கீழே விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த புதன்கிழமை மாலை தன் நண்பர்களுடன் சேர்ந்து பில்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார். அங்கு, நண்பர்களுடன் இணைந்து இளம்பெண்ணும் மது பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அனைவரும் மதுபானம் குடித்து வந்த நிலையில், இளம்பெண் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே […]
Continue reading …
நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிப்பது பெருமை என்று தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி” யின் 2 பாகத்தின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரபாஸ். இதன் மூலம் பிரபாஸ் இந்தியா முழுதும் பிரபலமானார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …
கேரள மாநிலத்தில் புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில தனியாருக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதளத்தை துவங்கியுள்ளது. கேரளா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஒன்றை மாநில அரசு நேற்று முன்தினம் துவங்கியது. கேபான் & கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “இத்திட்டம் கேரள மாநிலத்தை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுவதற்காக புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தனியாருக்குப் […]
Continue reading …
ஏஒன் தொழில்நுட்பம் மற்ற தொழில் நுட்பத்தை விடவும் உலகளவில் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மே மாதம் உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலை இழந்த நிலையில் அதில் 4000 பேர் ஏஒன் தொழில்நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இன்னும் அதிகமான வேலை […]
Continue reading …