Home » Archives by category » இந்தியா (Page 81)

பன்னாட்டு நிறுவனத்திலும் வருமானவரி சோதனையா?

Comments Off on பன்னாட்டு நிறுவனத்திலும் வருமானவரி சோதனையா?

வருமானவரியினர் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆகிய 11 மாநிலங்களில் 64 அலுவலகங்களில் […]

Continue reading …

இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

Comments Off on இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

இந்தியாவின் யூபிஐம், சிங்கப்பூரின் பேநௌ ஆகிய இரண்டு பணத்தை பரிமாற்றம் செய்யும் செயலிகள் தொடங்கி உள்ளதால் இருநாட்டின் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்குமான இச்செயல் இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் […]

Continue reading …

தாதாசாகேப் பால்கே விருதுகள் யார் யாருக்கு?

Comments Off on தாதாசாகேப் பால்கே விருதுகள் யார் யாருக்கு?

திரைப்படங்கள் இந்தியாவில் முதன்முதலாக உருவாக காரணமாக இருந்த இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் பல்வேறு பிரிவுகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரம்: சிறந்த திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ், சிறந்த இயக்குனர் : ஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்), சிறந்த நடிகர் : ரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா), சிறந்த நடிகை […]

Continue reading …

அமைச்சர் உதயநிதியின் உடனடி நடவடிக்கை!

Comments Off on அமைச்சர் உதயநிதியின் உடனடி நடவடிக்கை!

தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன. அவ்வபோது மாணவ அமைப்புகளிடையே ஏற்படும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் என்ற மாணவரை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ […]

Continue reading …

பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!

Comments Off on பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட மாநிலத்தவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல், பிரதமரை இழிவாக பேசிய வீடியோ வைரலான நிலையில் அந்த இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டு நபர்கள் இடையேயான மோதல் கடந்த சில காலமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் இரு தரப்பிலும் பகைமை உணர்வு அதிகரிப்பதாக அஞ்சப்படுகிறது. சமீபத்தில் ரயில் ஒன்றில் பயணிக்கும் வடமாநில இளைஞர்களை தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கியதுடன், பிரதமர் மோடி […]

Continue reading …

ஐபோனுக்காக டெலிவரி பாய் எரித்து கொலை!

Comments Off on ஐபோனுக்காக டெலிவரி பாய் எரித்து கொலை!

ஐபோனுக்காக டெலிவரி பாயை இளைஞர் எரித்து கொன்ற கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஹேமந்த் தத். ஐபோன் மீது ஆசைக்கொண்ட இவர் பல நாட்களாக ஐபோன் வாங்க முயற்சித்து வந்துள்ளார். சமீபத்தில் ஆன்லைனில் செகண்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி செய்ய கடந்த 7ம் தேதி ஹேமந்த் நாயக் என்ற டெலிவரி பாய் வந்துள்ளார். காசு எடுத்து வருவதாக […]

Continue reading …

உத்தரபிரதேசத்திலும் ஆளுநரை எதிர்த்து கோஷம்!

Comments Off on உத்தரபிரதேசத்திலும் ஆளுநரை எதிர்த்து கோஷம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரை நோக்கி “ஆளுநரே வெளியே போ” என்று கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது திடீரென “ஆளுநரே திரும்பி […]

Continue reading …

கணவன் மற்றும் மாமியை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி!

Comments Off on கணவன் மற்றும் மாமியை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி!

பெண் ஒருவர் கள்ளக்காதலனுக்காக தனது கணவனையும், மாமியாரையும் கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி நகரிலுள்ள நரேங்கி பகுதியில் வசித்து வந்த அமர்ஜோதி டே. இவரது தாயார் சங்கரி டே. சில ஆண்டுகளுக்கு முன்பு அமர்ஜோதி டேவுக்கு வந்தனா கலீடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரது திருமண வாழ்க்கையும் நன்றாக போய்க் கொண்டிருந்தபோது வந்தனாவுக்கு தன்ஜீத் தேகா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருங்கி […]

Continue reading …

சந்திரசேகர ராவை விமர்சித்த ஷர்மிளா!

Comments Off on சந்திரசேகர ராவை விமர்சித்த ஷர்மிளா!

ஒய்எஸ்ஆர் ஷர்மிளா தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், கேசிஆர் தான் தலிபான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷர்மிளா கடந்த சில நாட்களாக தெலுங்கானா அரசை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். ஷர்மிளா கூறுகையில், “தெலுங்கானா முதலமைச்சர் என்னை பார்த்து பயப்படுகிறார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. எனது நடைப்பயணம் 3000 […]

Continue reading …

இந்தியாவின் முதல் ‘இ-டபுள் டக்கர்’ பேருந்து!

Comments Off on இந்தியாவின் முதல் ‘இ-டபுள் டக்கர்’ பேருந்து!

மும்பையில் இன்று இந்தியாவின் முதல் இ-டபுள் டக்கர் பேருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த டபுள் டக்கர் பேருந்தில் 90 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். மும்பை மாநகர போக்குவரத்து கழகம் 200 ‘இ-டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல் கட்டமாக சில பேருந்துகள் மட்டும் மும்பையில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து […]

Continue reading …