Home » Archives by category » இந்தியா (Page 87)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

Comments Off on நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

ஜனவரி 31ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி நடத்தப்பட்டு அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் 67 நாட்கள் நடைபெறும் என்றும் முதல் கூட்டத்தொடரில் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள […]

Continue reading …

கவர்னர் நாளை டில்லி பயணம்!

Comments Off on கவர்னர் நாளை டில்லி பயணம்!

நாளை தமிழக கவர்னர் ரவி டில்லி பயணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழக சட்டசபை கூடிய போது ஆளுநர் உரையின்போது எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை சபாநாயகர் அப்பாவு கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நாளை டில்லிக்கு கவர்னர் ரவி […]

Continue reading …

மோடி திறந்துவைக்கும் சொகுசு கப்பல்!

Comments Off on மோடி திறந்துவைக்கும் சொகுசு கப்பல்!

நாளை பிரதமர் மோடி உலகின் மிக நீளமான ஆற்றுச் சொகுசு கப்பலை திறந்துவைக்க உள்ளார். பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. மக்களுக்கு பல திட்டங்கள், அறிவிப்புகள் இந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி நாளை (ஜனவரி 13) தொடங்கி வைக்கவுள்ளார். இந்த சொகுசு கப்பல் நாளை வாரணாசியில் இருந்து ஆரம்பித்து […]

Continue reading …

மெட்ரோ பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்!

Comments Off on மெட்ரோ பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்!

மெட்ரோ ரயில் பணிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அங்கு திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்து சில நாட்களாக கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அசோக் நகர் என்ற பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனை கவனித்த அதிகாரிகள் அதை சுற்றி வேலியமைத்து விபத்து ஏற்படாத வகையில் தடுத்தனர். பள்ளம் ஏற்பட்டது எதனால் என்பது குறித்து […]

Continue reading …

ஹரியானாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Comments Off on ஹரியானாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

இளம்பெண் ஒருவர் வேலை பார்த்த இடத்தில் மேலாளரிடம் சம்பள உயர்வு கேட்டு சென்ற போது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகுராம் பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் 30 வயது இளம்பெண் ஒருவர் பணி செய்து கொண்டிருந்த நிலையில் தனது சம்பளம் விவகாரம் தொடர்பாக மேலாளர் அழைத்ததின் பெயரில் அவரது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு போதை மருந்து கொடுத்த மேலாளர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக […]

Continue reading …

எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு கொலை முயற்சி செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் எம்பியாக உள்ள முகமது பைசல், அங்கு நடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் பிஎம் சையீதியின் மருமகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது சாலி என்பவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எம்பி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, இவ்வழக்கின் தீர்ப்பில், முகமது பைசல் உள்ளிட்ட […]

Continue reading …

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Comments Off on உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

உலக சுகாதார அமைப்பு நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு கொரொனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது. பல கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் கொரொனா தொற்று நோய் ஓரளவுவுக்கு குறைந்தது. ஆண்டிறுதியில் மீண்டும் பரவத் தொடங்கியது. குறிப்பாக சீனாவில் இ பிஎஃப்-7 என்ற உருமாறிய கொரோனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவி வருகிறது. அமெரிக்காவில் […]

Continue reading …

டாடாவின் புதிய ஐபோன் தொழிற்சாலை!

Comments Off on டாடாவின் புதிய ஐபோன் தொழிற்சாலை!

டாடா குழுமம் பெங்களூரு அருகே உள்ள ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா நிறுவனம் கடந்து சில மாதங்களாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. அவ்வகையில் பெங்களூரு அருகே தைவான் நாட்டிற்கு சொந்தமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இந்திய மதிப்பில் சுமார் 4950 கோடிக்கு டாடா வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மார்ச் 31ம் தேதி இறுதி […]

Continue reading …

சத்துணவில் பாம்பு, 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on சத்துணவில் பாம்பு, 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இருந்ததால் 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிர்மூம் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் மதிய உணவை சாப்பிடும் போது, அந்த உணவில் பாம்பு கிடந்துள்ளது. இந்த உணவைச் சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடக்க பள்ளி ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பள்ளியில் விசாரணை நடத்தப்படும் என மயூரேஸ்வர் வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் […]

Continue reading …

கடுங்குளிர் காரணமாக 98 பேர் மரணம்…

Comments Off on கடுங்குளிர் காரணமாக 98 பேர் மரணம்…

உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடுங்குளிர் காரணமாக இருதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இக்குளிரால் 25 பேர் இதய நோயால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது நிலவும் கடும் குளிரா கடந்த 5 நாட்களில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாகத் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 723 […]

Continue reading …