
பிறந்து 18 மாதங்களே ஆன மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உடல் உறுப்புகள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டதால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து குழந்தை கோமா நிலைக்குச் சென்றது. அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டதையடுத்து பெற்றோரின் அனுமதியுடன் அந்த குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் […]
Continue reading …
ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அமேசான் நிறுவனத்தின் பங்கு இறங்கியதால் அந்நிறுவனத்திற்கு நஷ்டம் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 18,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்த தகவல் காரணமாக நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் இறங்கியது. இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது இந்திய மதிப்பில் சுமார் 5000 கோடி என்றும் […]
Continue reading …
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாணவ மாணவிகளின் ஊட்டச்சத்து கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகள் சிக்கன் மற்றும் பாலங்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சாதம் பருப்பு காய்கறிகள் சோயா பீன்ஸ் முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. ஜனவரி முதல் […]
Continue reading …
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளையொட்டி “துணிவு” திரைப்படத் தயாரிப்பாளர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில ஆண்டுகளுக்கு முன் “ஸ்லம் டாக் மில்லியனார்” திரைப்படத்தில் அவர் சிறந்த இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்தியாவில் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய சினிமாவைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் இசையமைத்து வருகிறார். இன்று அவர் தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சினிமா கலைஞர்கள், அரசியல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட […]
Continue reading …
சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு அம்மாநில அரசு அதிரடியாக தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என்று பல அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் அனைத்து வகையான ஆன்லைன் சட்டத்திற்கு தடை விதித்து சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நேற்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பாதை தோற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி தனது தாயாரை பார்ப்பதற்காக டில்லி திரும்பினார். தனது தாயாரின் அவரது உடல் […]
Continue reading …
காகேசியின் ஷெப்பர்டு என்ற இன நாய் ஒன்றை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூபாய் 20 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணக்காரர்கள் பெரும்பாலும் தங்களுக்கு பிடித்த செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமும், பிரியமும் வைத்திருப்பார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கில் மற்றும் லட்சக்கணக்கில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு நாய் வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 கோடிக்கு காகேசியின் ஷெப்பர்டு இன […]
Continue reading …
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு 5 லட்சமாக அதிகரிக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்கள் […]
Continue reading …
மத்திய சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது. இதன் 5ம் அலை விரைவில் பரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் தற்போது பிஎப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
Continue reading …
சில தினங்களுக்கு முன் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என […]
Continue reading …