
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதோடு சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் தயாரிப்பில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உள்ளூர் மருந்தாளுனர்களின் ஆலோசனையின் […]
Continue reading …
நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இந்தியர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட ஏற்படும் வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறிவிடுகிறது. அப்படியாக விமானத்தில் நடந்த ஒரு கை கலப்பு சண்டைதான் தற்போது வைரலாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ஹாங்காங் சென்ற ‘தாய் ஸ்மைல் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சில இந்தியர்களும் பயணித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு இடையே இருக்கை தொடர்பாக ஏதோ வாக்குவாதம் எழுந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து […]
Continue reading …
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா பகுதியில் வசிக்கும் ஜெய்ராம் நாயக்(20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்ததோடு பலாத்காரமும் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள் சேர்ந்து ஜெய்ராமுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். இது தெரிந்து ஜெய்ராம் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக உள்ளதாக புகார் கூறியுள்ளனர். சிறுமி பள்ளி செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு […]
Continue reading …
உலகளவில் பணக்காரர்களின் டாப் 10 பட்டியிலில் இருக்கும் அதானி தனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பணக்கார் கவுதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக உள்ளார். இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 137.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் பெரும் செல்வந்தராகவும் […]
Continue reading …
டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டைக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. இவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இரண்டாவது மகள் ஆகியோருக்கு சில ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. முகேஷ் அம்பானி- மற்றும் நிதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும், வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும் இன்று ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள […]
Continue reading …
இன்று காலை முதல் நாடு முழுவதும் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சில ஆண்டுகளுக்கு முன் முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ நெட்வொர்க் இன்று உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் முதல் பிஸினஸ்மேன் வரை எல்லோரும் இணையதளம் பயன்படுத்த ஜியோ வருகைதான் காரணம். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ நெட்வோர்க் இன்று காலை முதல் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர், பெங்களுர், சென்னை உட்பட பல பகுதிகளில் […]
Continue reading …
டுவிட்டரில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 40 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடு போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் டுவிட்டர் பயனாளர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் பயனாளர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட […]
Continue reading …
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையிலிருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் மிக விரைவில் செல்லும் இடம் சென்று விடலாம் என்பதால் பயணிகள் இந்த ரயிலை தேர்வு செய்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் […]
Continue reading …
கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுநோய் பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்தது. ஆனால், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎப்-7 ஒமைக்கான் பரவலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய […]
Continue reading …
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவ்வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்கள் […]
Continue reading …