Home » Archives by category » இந்தியா (Page 89)

விமான நிலைய அதிகாரிகளால் அதிர்ச்சியடைந்த பெண்!

Comments Off on விமான நிலைய அதிகாரிகளால் அதிர்ச்சியடைந்த பெண்!

பெண் ஒருவர் டுவிட்டரில், பெங்களூரு விமான நிலையத்தில் மேலாடையை விமான நிலைய அதிகாரிகள் கழற்ற சொன்னதாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளும் நடத்தப்படுகின்றன. பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல வந்து செல்கின்றன. சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்த கிரிஷானி காத்வி என்ற பெண் “பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் என்னுடையை மேலாடையை கழற்றும்படி சொன்னார்கள். ஒரு […]

Continue reading …

பரூக் அப்துல்லா “ஒற்றுமை யாத்திரை”க்கு பாராட்டு!

Comments Off on பரூக் அப்துல்லா “ஒற்றுமை யாத்திரை”க்கு பாராட்டு!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ராகுல்காந்தியின் ‘ஒற்றுமை யாத்திரை’ இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, ஆந்திரா, தெலுங்கானா, டில்லி ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்தார். தற்போது உத்தரபிரதேசத்தில் யாத்திரையை ஆரம்பித்துள்ளார். நேற்று ராகுல் காந்தியின் யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை வரவேற்று பேசியிருந்தார். காஷ்மீர் முன்னாள் […]

Continue reading …

மர்மநபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

Comments Off on மர்மநபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

பிரதமர் மோடி கடந்த 4 நாட்களுக்கு முன்னாள் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் மீது சில மர்ம நபர்கள் கல்வீசியதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுறி பகுதிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இன்று காலை வந்தே பாரத் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் ரயில் மீது கல் எறிந்தனர். இதனால் வந்தே […]

Continue reading …

டில்லியில் நடந்த சம்பவத்தில் பரபரப்பு தகவல்!

Comments Off on டில்லியில் நடந்த சம்பவத்தில் பரபரப்பு தகவல்!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் டில்லியில் இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் அவர் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்யுள்ளது. இந்த கோர சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் வாகனத்தின் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து […]

Continue reading …

பிரதமர் மோடியின் டுவிட்!

Comments Off on பிரதமர் மோடியின் டுவிட்!

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை பதிவு செய்துள்ளார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீர மங்கை வேலு நாச்சியார். 18ம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணியாக இருந்த இவர் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வீரமங்கை […]

Continue reading …

பஞ்சாபில் ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Comments Off on பஞ்சாபில் ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி உள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் குளிரைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 8ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசு 2023 ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடுமுறை என்றும், ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் […]

Continue reading …

பேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை

Comments Off on பேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை

காதலி திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்(27) ஒருவர் பெண்ணை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, அப்பெண் தன் வீட்டில் தெரிவித்துள்ளார். இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் அவரை வேண்டாம் என்று கூறியுள்ளனர். பின்னர், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, இளைஞர் மனம் உடைந்து பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் […]

Continue reading …

பிரதமரின் தாயாரின் இறப்புக்கு பிரமுகர்களின் இரங்கல்!

Comments Off on பிரதமரின் தாயாரின் இறப்புக்கு பிரமுகர்களின் இரங்கல்!

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று குஜராத்தில் நடைபெற்றது. குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதர மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், […]

Continue reading …

இந்திய தயாரிப்பு மருந்தால் 18 குழந்தைகள் பலி!!

Comments Off on இந்திய தயாரிப்பு மருந்தால் 18 குழந்தைகள் பலி!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதோடு சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் தயாரிப்பில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உள்ளூர் மருந்தாளுனர்களின் ஆலோசனையின் […]

Continue reading …

நடுவானில் சண்டை!

Comments Off on நடுவானில் சண்டை!

நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இந்தியர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட ஏற்படும் வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறிவிடுகிறது. அப்படியாக விமானத்தில் நடந்த ஒரு கை கலப்பு சண்டைதான் தற்போது வைரலாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ஹாங்காங் சென்ற ‘தாய் ஸ்மைல் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சில இந்தியர்களும் பயணித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு இடையே இருக்கை தொடர்பாக ஏதோ வாக்குவாதம் எழுந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து […]

Continue reading …