ஏற்கனவே சமீபத்தில் பீகார் மாநிலத்தில் 12 பாலங்கள் இடிந்து விழுந்தது. இந்நிலையில் நேற்று இன்னொரு பாலம் இணைந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சஹர்சா மாவட்டத்திலுள்ள மஹிசி கிராமத்தில் தான் பாலம் இடிந்து விழுந்ததாகவும் ஆனால் நல்ல வேளையாக இந்த பாலம் இடிந்த போது அந்த பாலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லவில்லை என்பதால் எவ்விதமான உயிரிழப்பு, காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. துணை ஆட்சியர் ஜோதி குமார் சம்பவ இடத்தை நேரில் […]
Continue reading …அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அங்கு அவர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று உள்ளார். அந்நாட்டில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மாஸ்கோவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றுள்ளார். அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் […]
Continue reading …கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டர். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார். பின்னர் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை தொடர் ஆகியவற்றையும் அவர் தலைமையில் இந்தியா வென்றது. தோனி […]
Continue reading …கர்ப்பிணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்ததையடுத்து அந்த சத்துணவு கொடுத்த அங்கன்வாடி மையத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அங்கன்வாடிகளில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொட்டலத்தில் சிறிய வகை பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அந்த கர்ப்பிணி பெண் அதிர்ச்சியடைந்தார். இதனை தற்போது அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்யப்படுவதாகவும் அங்கன்வாடியில் பணி செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடந்து […]
Continue reading …ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிரோடி லால் மீனா அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், 7 மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கூறியிருந்தார். அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் அதிருப்தியில் […]
Continue reading …பிரதமர் மோடியை 20 ஓவர் உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 20 ஓவர் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று காலை நாடு திரும்பினர். டில்லி விமான நிலையத்திற்கு காலை ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் […]
Continue reading …இந்தியாவில் ஒரே வகையான சார்ஜ் போர்ட்டுகளை கொண்ட ஸ்மார்ட்போன்களை உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பலவகை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் பலவற்றிற்கும் சார்ஜிங் பாயிண்டுகள் விதவிதமான வகைகளில் உள்ளன. சமீபத்திய காலங்களில் சீன பிராண்டுகளான ஓப்போ, விவோ, ரியல்மி, ஷாவ்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவற்றில் உள்ள டைப் சி […]
Continue reading …நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 112 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது பெரும் […]
Continue reading …ராகுல் காந்தி இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியமைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக குற்றம் காட்டியது. அவர் பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் “தன்னை இந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை […]
Continue reading …இன்று காங்கிரஸ் கட்சி எம்பிகள் உள்பட பல எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியை 400 இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவித்தது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு மக்கள் 240 தொகுதிகள் மட்டுமே அளித்துள்ளார்கள் என்று ஆவேசமாக பேசினர். அவர்களின் பேச்சுக்குபிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிலில், “காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் கொடுக்கவில்லை, அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மட்டுமே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் தங்கள் […]
Continue reading …