முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது, ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசுதான்” […]
Continue reading …சென்னை ஆவடி அருகே புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை அடுத்து வந்தே பாரத், பெங்களூர் டபுள் டக்கர் உள்பட பல ரயில்கள் தாமதமாக கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. திடீரென சென்னை ஆவடி புறநகர் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. சென்னை அண்ணனூர் பணி மணியிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதாகவும் ரயில் ஓட்டுனர் துவங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய […]
Continue reading …லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், “லியோ” திரைப்படத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை தியேட்டரில் இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி சென்ற […]
Continue reading …வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சென்னையில் 20 இடங்களில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களிலும் வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சென்னை சவுகார்பேட்டை முத்தையா முதலில் தெருவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை […]
Continue reading …சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ என்று கூறப்படும் கண் நோய் அவ்வப்போது தோன்றும். தற்போது மீண்டும் மெட்ராஸ் ஐ தமிழகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு தொற்று நோய், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் மிக எளிதில் மற்றவருக்கும் பரவிவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கண் சிவப்பு கண் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தோன்றும் […]
Continue reading …மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று பணி நடந்து கொண்டிருக்கும் போது ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதமடைந்துள்ளது. சென்னை போரூரில் அஞ்சுகம் நகரிலுள்ள பார்த்தியநாதன் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மோதியதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனால் பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர். ஆனால் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடமைகள் சேதமாகின. […]
Continue reading …கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணம், டிராபிக் பிரச்சனை இல்லாமல் சுலபமான பயணம் ஆகியவை காரணமாக மெட்ரோ ரயில் அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை […]
Continue reading …தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி படம் ரிலீசாகிறது. நாளை பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில் […]
Continue reading …சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலையோரம் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகங்கள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. பெருநகரக சென்னை மாநகராட்சியில், நீண்ட நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடக்கின்ற வாகனங்களை அப்புறபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அதில், சாலையோரம், நடைபாதை மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பழுதடைந்த வானகங்கள், சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளவற்றை அகற்றவும், […]
Continue reading …