Home » Archives by category » சென்னை (Page 18)

சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

Comments Off on சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா […]

Continue reading …

மழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!

Comments Off on மழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!

நேற்றிரவு சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 விமானங்கள் வானில் சில நிமிடம் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றிரவு சென்னையில் திடீரென இடி மின்னல் மற்றும் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் பாதிப்படைந்தன. லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட உள்நாட்டிலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சில நிமிடங்கள் வானில் வட்டமடித்து அதன் பின்னர் […]

Continue reading …

உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசு அரசாணை!

Comments Off on உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசு அரசாணை!

தமிழக அரசு சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு […]

Continue reading …

இந்தியாவின் டாப்லிஸ்ட்டில் சென்னை ஐஐடி முதலிடம்!

Comments Off on இந்தியாவின் டாப்லிஸ்ட்டில் சென்னை ஐஐடி முதலிடம்!

சென்னை ஐஐடி இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இப்பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம் இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 86.69 புள்ளிகள் பெற்று ஐ.ஐ.டி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி உள்ளது. 72.14 புள்ளிகளுடன் டெல்லி எய்மஸ் நிறுவனம் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 62.74 புள்ளிகளுடன் 15ம் இடத்தில், கோவை அமிர்தா விஷ்வ வித்தியாபீடம் இடம் பெற்றுள்ளது. 17ம் இடத்தில் […]

Continue reading …

கஞ்சாவை தின்ற எலிகளால் இருவர் விடுதலை!

Comments Off on கஞ்சாவை தின்ற எலிகளால் இருவர் விடுதலை!

எலிகள் சாப்பிட்ட 11 கிலோ கஞ்சாவால், அதை கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்கள் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டது. மீதி 11 கிலோ கஞ்சா மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து வழக்கில் குற்றம் காட்டப்பட்ட இருவரையும் விடுதலை […]

Continue reading …

சினிமாவில் 30 ஆண்டுகளை கொண்டாடும் ரஹ்மான்!

Comments Off on சினிமாவில் 30 ஆண்டுகளை கொண்டாடும் ரஹ்மான்!

“ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். “ரோஜா” திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது. அதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துக்காக பெற்று வந்தார். இப்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து […]

Continue reading …

வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்!

Comments Off on வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்!

புதிய மேம்பாலம் ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைப்பதற்கு ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையின் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் பல மேம்பாலங்கள் கட்டும் திட்டங்கள் உள்ளன. அவ்வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீட்டர் நீளத்துக்கு புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் நோட்டு 95 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue reading …

செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Comments Off on செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

இன்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்தது. அவரது தரப்பில் என்.ஆர். இளங்கோ என்ற வழக்கறிஞரும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் செய்யப்பட்டன. இவ்வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறியதாவது, “2014&-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை […]

Continue reading …

வண்டலூர் பூங்காவில் புதிய அருங்காட்சியகம்!

Comments Off on வண்டலூர் பூங்காவில் புதிய அருங்காட்சியகம்!

வண்டலூர் பூங்காவில் 3டீ மற்றும் 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அருகிலுள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3டீ, 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை […]

Continue reading …

தெற்கு ரயில்வேயின் விபரம்!

Comments Off on தெற்கு ரயில்வேயின் விபரம்!

தென்னக ரயில்வே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் ரயில் ஆவடியிலிருந்து இயக்கப்படுவதாகவும் அதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வெள்ள […]

Continue reading …