சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் சர்வதேச தரத்திற்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சென்னையில் உள்ள 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையார், பெருங்குடி போன்ற பகுதிகளில் உள்ள […]
Continue reading …சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. […]
Continue reading …பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் காவல்துறையினர் அனுமதியின்றி பேரணி நடத்தியதால் 3500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக சென்னையில் மெழுகுவர்த்தி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். இப்பேரணியில் சுமார் 3,500 பேர் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாகவும் சட்டவிரோதமாக கூடியதாகவும் […]
Continue reading …இன்று சென்னையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து சென்னை அண்ணா சாலையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 50000 பேர் பலியாகி உள்ளனர். இன்று சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட் சாலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் உள்ளவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து […]
Continue reading …பல வெளிநாடுகளுக்கு சென்னையிலிருந்து விமான சேவை இருந்து வருகிறது. தற்போது இன்னும் கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையிலிருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய பல சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு […]
Continue reading …பல திரைப்படங்களின் மூலம் தனது நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்ந்தது. சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு […]
Continue reading …சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகள் கூறிய நிலையில் நான்கு சுவற்றுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யாரையும் சீண்டாமல் விதிகளை கடைபிடித்து பேரணியை நடத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை […]
Continue reading …சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிபிசி ஆவண படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என டில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் நிகழ்ச்சி சென்னையில் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட், ‘எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் பிபிசி ஆவணப்படத்தை எங்கள் பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது. யாருடைய தனிப்பட்ட உரிமைகளையும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் இந்த […]
Continue reading …சென்னை மாநகராட்சி சென்னையில் அனுமதியில்லாத இடத்தில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சாலை மற்றும் தெருப் பெயர்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருவதால் சாலையின் பெயர் கூட தெரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மற்றும் தெரு பெயர்கள் உள்ள பதாகைகள் மீது சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியின் சாலை, தெரு பெயர்களில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது […]
Continue reading …பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றும் போது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகள் தற்போது கையால் எழுதி வரும் நிலையில் இனி அனைத்தும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]
Continue reading …