Home » Archives by category » சென்னை (Page 38)

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

Comments Off on கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, திமுகவின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு […]

Continue reading …

முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

Comments Off on முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவில், மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, தக்காராக எல்.ஆதிமூலம் அவர்கள் உள்ளார். கோவிலின் துணை ஆணையராகவும், செயல் அலுவலராகவும் முல்லை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கோவிலில் பொறுப்பேற்ற நாள் முதல், கோவில் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. முக்கிய இலாகாவை வைத்திருக்கும் தமிழக அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு நெருக்கமானவராக கருதப்படும் முல்லை, சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாக, அவரின் கீழ் பணியாற்றிய பலர் […]

Continue reading …

நடிகர் சங்க நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு!

Comments Off on நடிகர் சங்க நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து ரஜினிகாந்தை சற்றுமுன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாக உள்ளது. நாசர், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விவாதிப்பதாக கூறப்படுகிறது.

Continue reading …

சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா அஜித்?

Comments Off on சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா அஜித்?

அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவி உள்ளது. சூப்பர் ஸ்டாரை தினமும் பலரும் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுபற்றி அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது, “அஜித் மற்றும் -ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகவல் பொய்யானது. இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது” என்று தெரிவித்தார்.

Continue reading …

ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

Comments Off on ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து பேசப்படலாம் என்றும் பேசப்படுகிறது. நீட் தேர்வு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Continue reading …

கல்விக் கொள்கைக்கு அரசாணை!

Comments Off on கல்விக் கொள்கைக்கு அரசாணை!

தமிழ்நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை திட்டங்களை ஏற்க முடியாது என்று கூறி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் […]

Continue reading …

நாளை முதல் சென்னையில் மலர் கண்காட்சி!

Comments Off on நாளை முதல் சென்னையில் மலர் கண்காட்சி!

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஏராளமான மலர்கள், மலர்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மலர்க் கண்காட்சி நாளை முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 […]

Continue reading …

வடமாநிலத்தவர்களுக்கு டிஜிபி உத்தரவு!

Comments Off on வடமாநிலத்தவர்களுக்கு டிஜிபி உத்தரவு!

டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். குல்பி, பானிப்பூரி விற்பவர்கள் மற்றும் இன்னபிற வேலையில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவரும் தங்களது பேர் மற்ற விவரங்களை காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Continue reading …

கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!

Comments Off on கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!
கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐ.டி. கல்லூரிக்கு “ஏ பிளஸ் பிளஸ்” சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கல்வி உரிமைதான் பெண்கள் உரிமை” என்று கூறியுள்ளார். மதச்சார்பின்மையின் மறு உருவம்தான் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி. எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு ஏபிளஸ்பிளஸ் தரச்சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மாணவிகள் மத்தியில் உரையாற்றிய போது, “பெண்களுக்கான கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி திகழ்கிறது. தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரிக்கு வாக்களிக்க வருவேன். என்னுடைய வெற்றிக்கான வாக்கினை செலுத்திய […]

Continue reading …

வங்கி கணக்குகளில் கோடியில் வரவு!

Comments Off on வங்கி கணக்குகளில் கோடியில் வரவு!

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ.13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் கிளையின் 100 வாடிக்கையாளர்களின் கணக்கில் திடீரென தவறுதலாக ரூ.13கோடி ரூபாய் வரவாக வைக்கப்பட்டு உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தவறை கண்டறித்த வங்கி கிளை உடனடியாக சம்பந்தபட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் வங்கி கணக்குகளில் வரவானதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Continue reading …