மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. நாடு முழுவதும் 19 கட்சிகளின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் […]
Continue reading …தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாகத்தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்ப்யு மனுதாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதிதான் வேட்புமனுதாக்கல் கடைசித் தேதி என்பதல் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இதில் போட்டியிட உள்ளன. இந்நிலையில்ல் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிட […]
Continue reading …காவேரி கூக்குரல் மூலம் 2.37 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள் மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் என 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் […]
Continue reading …வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த பிரத்யேக தகவலின் அடிப்படையில் 10.09.2021 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஈகே-542 எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 34 வயது பயணி மற்றும் எஃப்இசட்-447 விமானத்தில் 10.09.2021 அன்று காலை 4 மணிக்கு சென்னை வந்த 35 வயது பயணி ஆகியோர் விமான நிலைய வெளி வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அவர்களது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ. 1.33 கோடி மதிப்பில் 3125 கிராம் எடையில் […]
Continue reading …முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2021) முகாம் அலுவலகத்திலிருந்து, அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20-க்கும் […]
Continue reading …சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்தப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், […]
Continue reading …தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் நேற்று காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும். உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தால் ரூ 27.99 கோடி மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் அவற்றுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 12-09-21 மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் […]
Continue reading …சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு மகிழுந்து ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது, இது திரும்பப்பெறப்பட வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு மகிழுந்து நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் மகிழுந்து ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 […]
Continue reading …திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலிபிரி அருகில் உள்ள பூதேவி தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன் களை […]
Continue reading …