
நேற்று காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கருத்து தெரிவித்திருந்தார். அதில் பாஜகவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். மேலும், அதிமுக பாஜகவின் அடிமை என்றும் கூறியிருந்தார். இன்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னால் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதலமைச்சர் வெளியிட்ட கருத்திற்கு பதிலுரை வெளியிட்டுள்ளார். அதில், “செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதட்டத்தோடு பேசுகிறார். இப்பதட்டத்திற்கு என்ன காரணம்? அதிமுகவை முதலமைச்சர் சீண்டிப் பார்க்க கூடாது. இந்த […]
Continue reading …
பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் சாலை இல்லாததால் இளம் பெண்ணின் உடலை பல கி.மீ தொலைவுக்கு மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது […]
Continue reading …
நீதிமன்றத்தின் உத்தரவால் 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டுள்ளது. மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தில் உள்ளது. 1190 ஏக்கர் தரிசு நிலம் 2009ல் குத்தகைக்கு விடப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகத்திற்கு ஆண்டுக்கு 1 லட்சம் என்ற அடிப்படையில் 29 ஆண்டு குத்தகை விடப்பட்டிருந்தது. குத்தகைக்கு பெற்றதிலிருந்து நிலத்திற்கான வாடகை, குத்தகை பணம் எதுவுமே தொழிலதிபர் கொடுக்கவில்லை என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் […]
Continue reading …
திருமணமான 8 நாட்களில் 25 வயதான புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே கெங்கநாயக்கன் குப்பம் பகுதியில் விமல் ராஜ்க்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் திருமணம் நடந்தது. கேபிள் ஆபரேட்டரான இவர் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கி உள்ளார். அங்குள்ள ஒரு பகுதியில் செல்போன் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியலில் […]
Continue reading …
இன்று முதல் 14 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து போடிக்கு மீண்டும் ரயில் இயக்கப்படுவதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். மதுரையிலிருந்து போடிக்கு கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து வழித்தடம் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மதுரை முதல் தேனி வரை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மதுரையிலிருந்து போடி ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது என்பதும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் […]
Continue reading …
வானதி சீனிவாசன் பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், “பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூன் 18 முதல் தமிழகத்திலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஜூன் 18ம் தேதி 14 மாவட்டங்களிலும் ஜூன் 19ம் தேதி 12 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யவும் […]
Continue reading …
அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி, அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர், அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை […]
Continue reading …
சிறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்ணை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புழல் சிறையிலிருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட உடனே அமைச்சர் செந்தில் நெஞ்சுவலி என்று கூறியதா£ல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் “30 சதவீதம் அடைப்பிற்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் […]
Continue reading …