Home » Archives by category » தமிழகம் (Page 165)

பாஜக அரசை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on பாஜக அரசை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளையே தொடங்காதப் பற்றி பேசினார். சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உரையாற்றினார்.அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கருணாநிதி என்றாலே கிங் தான். கிண்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் தான் பொருத்தம். வாழ்ந்த காலம் முழுவதும் […]

Continue reading …

எங்கே அழைத்து சென்றனர் அமலாக்கத்துறை?

Comments Off on எங்கே அழைத்து சென்றனர் அமலாக்கத்துறை?

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அழைத்துச் சென்றதாகவும், அவர்களை எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய ராணுவத்தின் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்கு இருக்கின்றனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமாரை அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. […]

Continue reading …

கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

Comments Off on கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

விடுதலை செய்யப்பட்ட தமிழக அரசியல் கைதிகளுக்கு லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைகாவின் நிறுவனர் மற்றும் தலைவர் சுபாஸ்கரன். இவர், “கத்தி,” “எந்திரன் -2,” “பொன்னியின் செல்வன்- 1, 2” ஆகிய பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை விடுதலை செய்யப்பட்ட தமிழக […]

Continue reading …

பத்திரிகையாளர் மணியின் விளக்கம்

Comments Off on பத்திரிகையாளர் மணியின் விளக்கம்

பத்திரிகையாளர் மணி ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறைக்குத்தான் போயிருப்பார் என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கான பேட்டியளித்த பத்திரிக்கையாளர் மணி, “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்ட காரணத்தினால் அவருடன் வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் சிறை சென்றார்கள். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கோஷம் விட்டு வருகின்றனர். அண்ணாமலை கூறியதில் எந்த தவறும் இல்லை, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதலமைச்சர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது […]

Continue reading …

சோதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on சோதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

“அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது, அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” என அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த […]

Continue reading …

மதுபானம் அருந்தியதில் இருவர் உயிரிழப்பு

Comments Off on மதுபானம் அருந்தியதில் இருவர் உயிரிழப்பு

டாஸ்மாக் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மயிலாடுதுறை அருகே இருவர் மதுபானம் குடித்த நிலையில் அவர்கள் குடித்த மதுபானம் பரிசோதனை செய்யப்பட்டது. கெமிக்கல் பரிசோதனை செய்ததில் மதுவில் சயனைடு கலந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கமளித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மாலைக்குள் வந்து விடும் என்றும் அதன் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் […]

Continue reading …

தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!

Comments Off on தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!

பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் (35) மேற்கு வங்க மாநிலத்தில், வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபியா பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தன் தாயாரை கத்தியால் குத்திக் கொன்றார். அதன்பின்னர், தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றுள்ளார். அந்த சூட்கேசை திறந்து பார்த்த போலீசார் அப்பெண்ணிடம் இதுபற்றி விசாரணை நடத்தி கைது செய்தனர். அப்பெண் கூறியதாவது: “தனக்கு திருமணமாகி கணவர் இருக்கிறார். சம்பவத்தன்று […]

Continue reading …

அமைச்சர் அறையில் சோதனை; கிண்டலடித்த அதிமுக!

Comments Off on அமைச்சர் அறையில் சோதனை; கிண்டலடித்த அதிமுக!

அதிமுக கட்சியின் ஐடி விங் டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் சோதனை, உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை நடைபெறுகிறது” என பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிடப்பட்ட பதிவில், “அதிமுக ஆட்சியில் மேடை தோறும் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து வீராவேசமாக முழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! எங்கள் ஆட்சியிலாவது தலைமை செயலகத்தில் அதிகாரியின் அறையில்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது, ஆனால் இன்று உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சரின் அலுவலகத்திலேயே சட்டத்துக்கு […]

Continue reading …

குழந்தைத் தொழிலாளர்கள்- குறித்து எடப்பாடி டுவிட்

Comments Off on குழந்தைத் தொழிலாளர்கள்- குறித்து எடப்பாடி டுவிட்

எடப்பாடி பழனிசாமி “சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடமிருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார். இன்று குழந்தைத் தொழிலாளார் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை […]

Continue reading …

முன்னாள் அமைச்சரின் கேள்வி

Comments Off on முன்னாள் அமைச்சரின் கேள்வி

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றின் போது, “திமுக எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு சத்து இல்லாத […]

Continue reading …