
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும், சமூக நல ஆர்வலரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் வேட்டை தொடங்கிய நிலையில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது கள்ளச்சாராய உயிர் இழப்பு குறித்து எந்த நடிகரும் […]
Continue reading …
கக்கன் அவர்களின் 3வது மகன் சத்தியநாதனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். 1957 முதல் 1967 வரை தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர் அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறார். இவரது 3வது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர், தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார். […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “பொன்னின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது “இந்தியன் 2”, “லால் சலாம்“, “விடாமுயற்சி” உள்பட ஒரு சில படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. […]
Continue reading …
தமிழக அரசு “கேரளா ஸ்டோரி” திரைப்படம் தடை செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. “தி கேரளா ஸ்டோரி” பாலிவுட் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக அந்த படத்தை தடை செய்ய கோரி பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதிலளித்தது. திரைப்படம் வெளியான நிலையில் சில மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தயாரிப்பு […]
Continue reading …
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் தற்போது சாராய ஆறு தான் ஓடுகிறது என தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துள்ளது. தங்குதடையின்றி தமிழக முழுதும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. தற்போது 1600 பேர் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசும் அரசும் தவறிவிட்டது, இதனால் பல உயிர்களை […]
Continue reading …
கட்டுப்பாட்டு அறையிலிருந்தே போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை அமல்படுத்தப்படவுள்ளதால் இனி போக்குவரத்து விதியை மீறுபவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது, சிக்னல்களை மீறி செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது போன்ற போக்குவரத்து விதிகளுக்கு மீறி வாகன ஓட்டிகள் செயல்பட்டால் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அபராதம் விதிக்க புதிய நடைமுறை […]
Continue reading …
பொறியியல் பட்டதாரிகள் உதவி சுற்றுலா அதிபர் பதவிக்கு தகுதி தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறையில் உள்ள உதவி சுற்றுலா அலுவலர் மற்றும் சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடைபெற உள்ளன. அவ்வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு நடத்தப்பட்டு காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. உதவி சுற்றுலா அலுவலர் பதவியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் நிலையில் இதற்கான திருத்தப்பட்ட தகுதி […]
Continue reading …
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் தற்கொலை தான் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளியை சூறையாடினர். இதனால் பள்ளி சில மாதங்களுக்கு மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் போலீஸ் சிபிசிஐடி போலீஸ் […]
Continue reading …
நடிகை நமீதா, “கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவையில் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகை நமீதா, “பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் […]
Continue reading …
மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர். காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக […]
Continue reading …