
அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான வெயிலும் இருக்கும், மழையும் பெய்யும் என்று வானிலைமையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் மே 26ம் தேதி வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மீதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும். மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, […]
Continue reading …
ஆவின் நிறுவனம் தினமும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த டெண்டர் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்வளத்துறை அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆவின் நிறுவனத்தின் மூலம் மினரல் வாட்டர் பாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். பெட் பாட்டில்கள் மூலம் ஒரு லிட்டர், அரை லிட்டர் வகைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் […]
Continue reading …
நாளை முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற இருந்தது. ஆனால் இந்த கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியருக்கான இடம் ஆறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த பொது பணியிட மாறுதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி […]
Continue reading …
கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சிலர் மரணமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகம் மாவட்டத்தின் புதிய டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Continue reading …
கவர்னர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த […]
Continue reading …
இன்று மாலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Continue reading …
இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐயப்பனின் மகன் ராகவன் இன்று காலை தேர்வு முடிவை பார்த்ததும் தான் தோல்வியடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]
Continue reading …
மத்திய அரசு பணியிடங்கள் சிலவற்றை தனியார் துறைகள் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யூபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு ஆட்கள் அமர்த்தப்படுவது வழக்கம். சமீபத்தில் மத்திய அரசின் 12 துறைகளில் உள்ள இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான பணியிடங்களை தனியார் துறை நிபுணர்களை கொண்டு நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு […]
Continue reading …
இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெளியாகின, இதனை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தேர்வு துறை இயக்ககம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி […]
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் தகவல்களையும் அறியும் வகையில் ‘திருக்கோவில்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான திருக்கோவில்கள், தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன. கோவில்கள் யாவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பக்தர்கள் கோவில்களை பற்றி முழுவதுமே அறிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை ‘திருக்கோவில்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் முருகன் கோவில்கள், அம்மன் கோவில்கள், பெருமாள், சிவன், விநாயகர் கோவில்கள் என […]
Continue reading …