Home » Archives by category » தமிழகம் (Page 199)

லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி!

Comments Off on லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி!

கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 5 பெண்கள் பலியான சம்பவம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகேயுள்ள வட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவி இவரின் மனைவி, கவிதா, சாந்தி கவிதாவின் தம்பியின் 4 வயது மகள் லக்சனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, காரில் திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காரை ரவி ஓட்டி வந்தார். கார் பரமத்தி வேலூர் […]

Continue reading …

கமல் அளித்த டுவிஸ்டான பதில்!

Comments Off on கமல் அளித்த டுவிஸ்டான பதில்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் திமுகவோடு கூட்டணி அமைக்க போறீர்களா என்ற கேள்விக்கு டுவிஸ்ட்டான பதிலை அளித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமலஹாசன் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஈரோடு கிழக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மேலும் கமல்ஹாசன் தனது கட்சி ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மக்கள் […]

Continue reading …

மதுரையில் பரபரப்பு!

Comments Off on மதுரையில் பரபரப்பு!

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியை பிடிக்க முயன்ற போலீசை ரவுடி அரிவாளால் தாக்கியதால் போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்கள் முன்னதாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி டோரா பாலா உத்தங்குடி பகுதியில் உள்ள முட்புதரில் கொன்று சடலமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டோரா பாலாவை கொன்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த வினோத் மற்றும் அவனது […]

Continue reading …

EPFOவில் அதிக ஓய்வூதியம் பெறலாம்!

Comments Off on EPFOவில் அதிக ஓய்வூதியம் பெறலாம்!

பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்புநிதி அமைப்பு(EPFO) ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்து, அதற்கு நிகரான தொகையை பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் பெற்று வருங்கால வைப்புநிதி கணக்கில் வரவு செய்கிறது. இவ்வாறு வரவு செய்யப்படும் தொகையில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படுகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி […]

Continue reading …

நாகையில் மிதமான மழையால் நெல் மூட்டைகள் பாதிப்பு!

Comments Off on நாகையில் மிதமான மழையால் நெல் மூட்டைகள் பாதிப்பு!

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் இன்று டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதன்படியே இன்று நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மிதமான மழைக்கே நாகை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. […]

Continue reading …

ஓலா காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது!

Comments Off on ஓலா காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற ஓலா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காரில் […]

Continue reading …

வடலூரில் பரபரப்பு!

Comments Off on வடலூரில் பரபரப்பு!

வடலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடலூரில் ஆணழகன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் பெரிய கொல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் பயிற்சியில் […]

Continue reading …

மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி இவ்வளவுதானா?

Comments Off on மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி இவ்வளவுதானா?

தகவல் அறியும் உரிமை மூலமாக மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தகவல்கள் வளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மதுரையில் மத்திய அரசின் பல்நோக்கு நவீன மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் இதற்காக கல் நடப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது தொடர் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஆனால் அதேசமயம் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே காலத்தில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல […]

Continue reading …

நடிகை குஷ்புவுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Comments Off on நடிகை குஷ்புவுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை குஷ்பூவுக்கு பாஜக மேலிடம் கூடுதல் பதவி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற பதவியையும் பெற்றுள்ளார். இதுகுறித்து அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. நடிகை குஷ்பூவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய குழு உறுப்பினரான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக […]

Continue reading …

ஈபிஎஸ் கோரிக்கை!

Comments Off on ஈபிஎஸ் கோரிக்கை!

ஈபிஎஸ் பிப்ரவரி 25ல் நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 25ஆம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. மாநிலம் முழுதும் 186 தேர்வு மையங்களில் பிப்ரவரி 25ம் தேதி நடந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் குளறுபடி சரி செய்யப்பட்டு மீண்டும் காலதாமதமாக தேர்வு நடந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் […]

Continue reading …