Home » Archives by category » தமிழகம் (Page 197)

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Comments Off on அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசு பேருந்துகள் எதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது, மக்களுக்கு கிடைக்கிற எச்சலுகையும் […]

Continue reading …

விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

Comments Off on விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் உதவியாளர் ரவியிடம் விசாரணை செய்தபோது அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து […]

Continue reading …

வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

Comments Off on வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம் என்று பேட்டி அளித்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பீகார் மாநில சட்டமன்றத்தில் இது குறித்த பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் தமிழக டிஜேபி சைலேந்திரபாபு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். “ஹோலி பண்டிகை கொண்டாட வட மாநிலத்திற்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் பேட்டியளித்தபோது ஹோலி பண்டிகை கொண்டாட நாங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடித்துவிட்டு […]

Continue reading …

கஸ்தூரியின் சர்ச்சையான டுவிட்!

Comments Off on கஸ்தூரியின் சர்ச்சையான டுவிட்!

வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காக வந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டுவிட்டால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முதலமைச்சர் முக.ஸ்டாலின், “வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரிக்கைகளின் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. […]

Continue reading …

காய்ச்சலால் பீதி வேண்டாம்; சுகாதாரத்துறை அறிவிப்பு!

Comments Off on காய்ச்சலால் பீதி வேண்டாம்; சுகாதாரத்துறை அறிவிப்பு!

சுகாதாரத்துறை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதீத காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருவகையான புதிய வைரஸ் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் […]

Continue reading …

மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

Comments Off on மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உழவர்கள் மானியத்துடன் கூடிய உரங்களை வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத்தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், மானிய செலவினங்கள் முறைப்படுத்தவும், மானிய விரயங்களை தவிர்க்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் […]

Continue reading …

டிடிவி தினகரனின் பரபரப்பு பேச்சு!

Comments Off on டிடிவி தினகரனின் பரபரப்பு பேச்சு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “இரட்டை இலை என்றால் டெபாசிட் போயிருக்கும்” என்று அதிமுகவின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் போது செயலாளர் டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை பெரும் அளவுக்கு வாக்குகளை பெற்றார். திமுகவுக்கு நிகராக அதிமுகவினரும் பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அவர்கள் படுதோல்வி […]

Continue reading …

இன்று பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கல்!

Comments Off on இன்று பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கல்!

இன்று முதல் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ம் வகுப்புக்கு பொது தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளை சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று […]

Continue reading …

ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்!

திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் திமுக வெற்றி குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு பார்முலா என புதிய ஜனநாயக படுகொலையை திமுக […]

Continue reading …

நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

Comments Off on நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

நாஞ்சில் சம்பத் ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தோல்வி காரணமாக, அவரது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் போட்டியிட்டது. அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. தேர்தல் ஆணையத்தில் போராடி அந்த சின்னத்தை பெற்றது. மேலும் ஓபிஎஸ் அணியை புறந்தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி அணி ஓபிஎஸ் மற்றும் பாஜக […]

Continue reading …