
டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள்(01.-03.-23) தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் […]
Continue reading …
பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் அளிக்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். […]
Continue reading …
நாளை இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரண்டு நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது விளையாட்டு துறையை மேம்பாடுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக டில்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]
Continue reading …
ஓபிஎஸ் கட்சியின் நலனுக்காக பொறுமை காத்தோம், இனி பல ரகசியங்களை மக்களை சந்திக்கும் போது சொல்லப் போகிறோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அதில் பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சட்டபூர்வமாக அதிமுக சென்றுவிட்டது என்பது உறுதியாகி […]
Continue reading …
கோவையில் விவசாய பகுதிகளில் ஆட்டம் காட்டி வந்த ஒற்றை காட்டு யானை பிடிபட்ட நிலையில் அதை வனப்பகுதியில் விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதிகள் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அவை காட்டுக்குள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் மக்னா யானை ஒன்று விவசாய பகுதிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதை காட்டுக்குள் விரட்ட […]
Continue reading …
10 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கண்ணன் 10வது வகுப்பு மட்டுமே படித்த முடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். போலி மருத்துவம் பார்ப்பதற்கு மக்களிடம் பணமும் வசூலித்து வந்துள்ளதாகக் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, அவரிடம் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். […]
Continue reading …
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை இருந்து வருகிறது. பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 24 வரை தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவரமும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 27, 28 […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி பேராசிரியர் பெரியசாமி சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசரியர் பெரியசாமி சமீபத்தில், சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி தன் டுவிட்டர் பக்கத்தில், “சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது […]
Continue reading …
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் பணப்பட்டுவாடா நடத்துவதாக புகார் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு கவுரவ பிரச்சனை என்றும் இத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் வெற்றி […]
Continue reading …
அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்ய அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திட்டம் எப்போது முடியும், தண்ணீர் பாசனம் கிடைக்கும் என மக்கள் ஆர்வமாய் காத்திருக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 மதிப்பில் நடந்து வரும் […]
Continue reading …