Home » Archives by category » தமிழகம் (Page 245)

மாணவி பலி!

Comments Off on மாணவி பலி!

பேருந்தின் படியில் இருந்து விழுந்த மாணவி ஒருவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் சமீபகாலமாக ஹாட் ஆப் த டாப்பிக்காக உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் […]

Continue reading …

ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தின விழாவாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறும் அசிரியர்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகளுடம் தொடர்பில் இருந்தால் விருது பரிந்துரையில் இடம்பெறாது. வணிக ரீதியில் கற்பிக்கும் […]

Continue reading …

மர்மமாக சுற்றிய சிறுவன்!

Comments Off on மர்மமாக சுற்றிய சிறுவன்!

மர்மமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் பிடித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீசார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், […]

Continue reading …

பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

Comments Off on பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு தேதியை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25ம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் […]

Continue reading …

தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

Comments Off on தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். மின்சார சட்டத் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மின்சார சட்டத் திருத்த […]

Continue reading …

புதிய நகைக்கடையில் கைவரிசை!

Comments Off on புதிய நகைக்கடையில் கைவரிசை!

கள்ளக்குறிச்சி அருகே புதிய நகைக்கடை திறந்து இரண்டே நாட்களில் திருடர்கள் கடையையே காலி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் நகைக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்த 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்த வயர்களையும் துண்டித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து […]

Continue reading …

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Comments Off on முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டிப் பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் ரயில் நிலையமருகே பேருந்து ஒன்று மோதியதில் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. பேருந்து ஆட்டோ உள்ளிட்டவைகளும் சேதமடைந்தது. வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூபாய் […]

Continue reading …

8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Comments Off on 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் நாளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 10ம் தேதி விருதுநகர் நெல்லை தென்காசி தேனி […]

Continue reading …

ஸ்டெர்லைட் ஆலைக்காக 7 நிறுவனங்கள் போட்டி!

Comments Off on ஸ்டெர்லைட் ஆலைக்காக 7 நிறுவனங்கள் போட்டி!
ஸ்டெர்லைட் ஆலைக்காக 7 நிறுவனங்கள் போட்டி!

7 நிறுவனங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்காக முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். தமிழக அரசு அனுமதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஆலை கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது. ஆலையை வாங்குவதற்கு ஜூலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் […]

Continue reading …

சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை !

Comments Off on சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை !

சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் அந்த உடலை 4 பேர் தூக்கி செல்லும் காட்சியின் […]

Continue reading …